மேலும் அறிய

நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - சட்டப்பேரவை தலைமை கொறடா

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்த பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாதத்திற்கு இரண்டு மாவட்டங்கள் வீதம் சென்று சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்ய திட்டம் - தமிழக சட்டப்பேரவை தலைமை கொறடா கோவி செழியன்

தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு மாவட்ட வாரியாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் பணியை நேற்றைய தினம் தொடங்கியுள்ளது.தமிழக சட்டபேரவை அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற மனுக்கள் குழு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 நாள் பயணமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான ஆய்வு பணியினை மனுக்கள் குழுவினர் மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 263 மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த துறை சார்ந்த அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறும் பொழுது,


நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - சட்டப்பேரவை தலைமை கொறடா

தமிழக சட்டமன்ற  மனுக்கள் குழு   கூடி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி இதுவரை 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இரண்டு தினங்களாக நடந்த மனுக்கள் மீதான ஆய்வு கூட்டத்தில் பொது மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, நெல்லை மாவட்டத்தில் பெறப்பட்ட 263 மனுக்களில் 74 மனுக்கு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது 7 மனுக்களை மீண்டும் மறு ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் சமுதாய நலக்கூடம்  அமைத்தல், கழிப்பறை, சாலை மேம்பாடு உள்ளிட்டவைகளில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்ய மனுக்கள் குழு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களை மாதம் 2 மாவட்டம் வீதம் ஆய்வு செய்ய மனுக்கள் குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த கட்டமாக கோவை,  நீலகிரி மாவட்டங்களிலும் அதனை தொடர்ந்து கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - சட்டப்பேரவை தலைமை கொறடா

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கவும், தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மனுக்கள் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி,கே.பி.சங்கர், கிரி, மதியழகன்,சந்திரன் ,மாங்குடி மற்றும் பிரபாகர ராஜா , மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மனுதாரர்கள்   கலந்து கொண்டனர்

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget