மேலும் அறிய

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தமிழக பக்தர்களின் மருத்துவம் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இரண்டு அதிகாரிகள் 24 மணி நேரமும் சபரிமலை சன்னிதானத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை கண்காணிப்பதற்காக கேரள அரசு ஒத்துழைப்புடன் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொள்ள இன்று தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று வருகை தந்தார் முதலாவதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள புராதன மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு பின்னர் சாமி தரிசனத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர்  நீதிமன்ற உத்தரவின் பேரில் சுசீந்திரம் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார்.

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தீ விபத்து ஏற்பட்டு கருவறை மேற்கூரை சேதமடைந்தது தமிழக அரசு  1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இத்தனை சீரமைக்கும் திருப்பணிகளை அமைச்சர் நேரில் சென்று துவங்கி வைத்தார். இதற்கிடையே வளர்ந்து வரும் கோவில் என்பதால் கோவிலை விரிவுபடுத்த வேண்டும். கோவில் திருக்கொடிகம்பத்தை மாற்ற வேண்டும். ஆகம விதிகளின்படி பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் மண்டைக்காடு கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்பு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் சபரிமலை சன்னிதானத்தில் தமிழக பக்தர்களின் மருத்துவம் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இரண்டு அதிகாரிகள் 24 மணி நேரமும் சபரிமலை சன்னிதானத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார். 

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இருதய சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக ஆம்புலன்ஸ்  வசதி வரும் 14-ஆம் தேதி சென்னையில் துவங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு போராட்டக் குழுவினரை   அழைத்து  நாகர்கோவிலில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து அமைப்பினர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், கோவில் திருப்பணிகள் தேவபிரசன்னத்தின் அடிப்படையில், ஆகம விதிகளின்படிதான்   நடக்கிறது. கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளதால் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக அறநிலையத்துறை தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர், போராட்டத்தால் இந்து பக்தர்களை கோவிலில் நடந்த திருப்பணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  விடாமல் வர விடாமல் தடுத்து விட்டீர்கள்  என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget