மேலும் அறிய

சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து நெல்லை சிறையிலும் இன்டர்காம் வசதி

தமிழகம் முழுவதும் சிறைச்சாலையில் நேர்காணல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு சிறைவாசிகள் உறவினர்களுடன் இன்டர்காம் தொலைபேசியில் பேசும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை  மத்திய சிறையில்  கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,353  பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகள் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக சிறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்ற பிறகு தான் பேச முடியும். கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையே 2 மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் அங்கு நின்று பேசுவதால் சத்தம் அதிகமாக இருக்கும். இதனால் உறவினர்கள் பேசுவதை கைதிகளால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. குறிப்பாக வயதான கைதிகள் அல்லது வயதான உறவினர்கள் வந்து பேசும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்வதை தெளிவாக புரிந்து கொள்ள சிரமமாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் தெளிவாக பேசும் வகையில் மூன்றாவது போலீஸ் கமிஷன் பரிந்துரைப்படி நவீன முறையில் கண்ணாடி தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு  நேர்காணல் அறை வடிவமைக்கப்பட்டு இன்டர்காமில் பேசும் வகையில்  முதல்கட்டமாக  சென்னை, கோவை, மதுரை ஆகிய சிறைகளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய  சிறையிலும் சிறைவாசிகளுடன் உறவினர்கள் தெளிவாக இடையூரின்றி பேசும் வகையில் நவீன நேர்காணல் அறை அமைக்கப்பட்டு இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை  சிறைத்துறை டிஐஜி பழனி  தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து சிறைவாசிகள் உறவினர்களுடன் இன்டர்காமில்  பேசினர்.


சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து நெல்லை சிறையிலும் இன்டர்காம் வசதி

தமிழகம் முழுவதும் சிறைச்சாலையில் நேர்காணல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு சிறைவாசிகள் உறவினர்களுடன் இன்டர்காம் தொலைபேசியில் பேசும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நேர்காணல் அறையில் ஒரே நேரத்தில் 26 பேர் பேசலாம். இந்த வசதி மூலம் சிறைவாசிகள் உறவினர்களிடம் தெளிவாக பேசமுடியும்  என சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget