மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க கூடுதல் பால் கொள்முதல் - அமைச்சர் நாசர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பால் வரவில்லை. இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டத்தில் 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க கூடுதல் பால் கொள்முதல்  - அமைச்சர் நாசர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். பால் தாமதமாகவும், அளவு குறைவாக வினியோகம் செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு பால் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. தகவல் அறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன், பொது மேலாளர்கள் ராஜ்குமார்,தியானேஷ் பாபு மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணம் என்ன அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க கூடுதல் பால் கொள்முதல்  - அமைச்சர் நாசர்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பால் வரவில்லை. அதையும் சரி செய்து விட்டோம். இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டத்தில் 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதனை சரி செய்து விடுவோம். கூடுதலாக பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க கூடுதல் பால் கொள்முதல்  - அமைச்சர் நாசர்

பால் அளவு குறைவு என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகுதான் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தரக்கட்டுப்பாடு உணவு கட்டுப்பாடு மற்றும் ஆவின் என்ஜினீயர்கள் ஆய்வுக்குப் பிறகு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் எந்தவித காரணத்தை கொண்டும் அளவு குறைவு இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விவசாயிகளுக்கு சமீபத்தில் கொள்முதல் விலையும் ரூ.35 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் தனி பிராண்டாக உள்ளது. எந்தவித கலப்படமும் இல்லாமல் பால் வழங்கப்படுகிறது. ஆவின் வியாபார நோக்கத்தோடு செயல்படும் நிறுவனம் அல்ல. பொதுமக்கள் சேவைக்காக இயங்கி வருகிறது. கடந்த தீபாவளியை முன்னிட்டு இனிப்பு விற்பனையில், மற்ற தனியாருக்கு நாங்கள் போட்டியாக மாறிவிட்டோம். ரூ.140 கோடி வரை இனிப்புகள் விற்பனையானது. ஐஸ்கிரீம் விற்பனையிலும் தனிக் கவனம் செலுத்தி, அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களுக்கும் அதனை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Trump Threaten Ukraine: ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
Chennai Power Cut: சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget