மேலும் அறிய

Exclusive: நெல்லை மாநகர திமுகவில் மேலும் பிளவா? 2 அணி 5 அணியாக மாறியதா? - போட்டி வேட்பாளர் கூறுவது என்ன?

”தற்போது மாவட்ட செயலாளர் அணி, எம்எல்ஏ அணி, முன்னாள் எம்எல்ஏ அணி, மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சேராத அணி என 5 அணியாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது”

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 44 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்தவர்களும், 7 பேர் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், 4 பேர் அதிமுகவை சேர்ந்தவர்களும் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்குமிடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் மேயர் சரவணன் தலைமை அறிவுறுத்தலின் படி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகராட்சியில் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. 

தேர்தலில் ஏற்பட்ட பரபரப்பு:

தேர்தலுக்கு முந்தைய நாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் போட்டியின்றி தேர்தலில் ஒருமனதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் தேர்தல் அன்று காலை 10 மணிக்கு மேல் மேயர் வேட்பாளரை எதிர்த்து 6 வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேயர் வேட்பாளரை எதிர்த்து திமுகவில் இருந்த வேட்பாளர் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு நடந்து முடிந்த தேர்தலில்  திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் 30 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் - 23 வாக்குகளும் பெற்ற நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் வராத நிலையில் செல்லாத வாக்காக 1 பதிவானது.

கட்சிக்குள் தொடரும் பிளவு?

ஏற்கனவே திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிபூசல் காரணமாக  மாநகராட்சியில் பல கோப்புகள் தேங்கி கிடப்பதோடு மக்கள் பணிகள் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போதைய மேயர் தேர்ந்தெடுப்பதில் அமைச்சர்கள் மிகத்தீவிரமாக களம் இறங்கி செயல்பட்டனர். ஆனால் தலைமை நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து திமுகவில் இருந்த ஒருவரே போட்டியிட்டதோடு அவருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்தவர்களே வாக்கு செலுத்தியது கட்சிக்குள் மேலும் பிளவு இருப்பதையே காட்டுகிறது. கட்சி பணிகள் எவ்வாறு நடக்கும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன் மாவட்ட செயலாளர் அணி, அவரது எதிர்ப்பு அணி என்று இருந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் அணி, எம் எல் ஏ அணி, முன்னாள் எம் எல் ஏ அணி, மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சேராத அணி என 5 அணியாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆதங்கத்தில் தான் போட்டியே தவிர கட்சிக்கு எதிராக ஒரு போதும் இல்லை

இதனிடையே இதுகுறித்து ஏபிபி நாடு மூலம் நாம் எதிர்த்து போட்டியிட்ட கவுன்சிலர் பவுல்ராஜை தொடர்பு கொண்டு பேசிய போது, "முதலில் மேயரை சரவணனை எதிர்க்கும் போது என்னை கட்சியில் இருந்து நீக்கினர். அப்போது எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது.  ஏனென்றால் மாவட்ட செயலாளரை மாற்றியதே மாநகராட்சி பிரச்சினைக்காக தான். ஆனால் பொறுப்பு மாவட்ட செயலாளர் மாநகராட்சி பிரச்சினையை முறையாக கையாள அவர் தவறி விட்டார். இதனை தலைமை புரிந்து கொள்ளவில்லை. இங்கு உள்ளவர்களின் தகவல்படியே தலைமை என்னை நீக்கியது.  மன்னிப்பு கடிதம் கொடுத்து 6 மாதமாகியும் தற்போது வரை தலைமை என்னை ஏற்கவில்லை. ஆனால் நான் தற்போது வரை மாற்று கட்சிக்கு செல்ல விரும்பவில்லை. திமுகவின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறேன்.  எனது கோபம் ஆதங்கம் அனைத்தும் கட்சியில் இருந்து நீக்கிய என்னை கட்சியில் இணைக்காதது தான். அப்படி இணைத்திருந்தால் கட்சிக்கு கட்டுப்பட்டு நான் போட்டியிடாமல் நின்று இருப்பேன். அதனால் தான் போட்டியிட்டேன். அதோடு இந்த தேர்தலை ஒரு ஆரோக்கியமான தேர்தலாக தான் அனைவரும் பார்க்க வேண்டும். போட்டியின்றி தேர்வானதை விட போட்டியிட்டு அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றியிருப்பதை ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்க வேண்டும். நான் திமுகவிற்கு எதிராக செயல்பட ஒரு நாளும் நினைத்ததில்லை.. தொடர்ந்து தற்போதைய மேயருடன் இணைந்தே கட்சியில் இல்லாவிட்டாலும் கட்சிக்காக பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார். 

எது எப்படியோ இனி வரும் காலங்களில் மாநகராட்சி கூட்டங்கள் சுமூகமாக நடந்து மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவால் மீண்டும் நெல்லை மாநகராட்சியில் சர்ச்சை ஏற்பட்டால் அது எதிர்வரும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும், அது நடைபெறா வண்ணம் தலைமை  சரிசெய்ய வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Gold Price: நடுத்தர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!
Gold Price: நடுத்தர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Images: விண்வெளி நிலையத்தை அமைக்க போகும் இந்தியா...எப்படி இருக்கும் தெரியுமா..!
விண்வெளி நிலையத்தை அமைக்க போகும் இந்தியா...எப்படி இருக்கும் தெரியுமா..!
Embed widget