மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காணாமல் போன எச்சரிக்கை பதாகைகள் - கடலில் நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் ஆபத்து

கோயில் கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதி என பக்தர்களுக்கு எச்சரிக்கை செய்யும் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அந்த போர்டும் காணாமல் போய்விட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் நீராடிய போது 10க்கும் அதிகமான பக்தர்களுக்கு கால் முறிவு மற்றும் காயம் ஏற்பட்டது. கடல்சீற்றம் மற்றும் பாறைகள் நிறைந்த கடலில் குளித்தால் பக்தர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காணாமல் போன எச்சரிக்கை பதாகைகள் - கடலில் நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் ஆபத்து

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் 22 தீர்த்த கட்டங்களை உள்ளடக்கியது. இதனால் இந்த கடலில் பக்தர்கள் புனித நீராடுவதை தனி சிறப்பாக கருதுகின்றனர். இந்த கடல் பகுதி பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தினங்களில் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமான ஒன்றாகும்.


திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காணாமல் போன எச்சரிக்கை பதாகைகள் - கடலில் நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் ஆபத்து

இந்நிலையில் கோடை விடுமுறை, ஞாயிறு விடுமுறை மற்றும் முகூர்ந்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கடலில் குளித்த போது அலையின் வேகத்தால் அவர்கள் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டனர். அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.


திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காணாமல் போன எச்சரிக்கை பதாகைகள் - கடலில் நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் ஆபத்து

இதில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் (64), கரூரைச் சேர்ந்த தங்கம் (54), கோயம்புத்தூரைச் சேர்ந்த கண்ணம்மா (70), ராமநாதபுரத்தை சேர்ந்த பாக்கியம் (70), தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துமாரி (22) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு சம்பவங்களில் காயம் ஏற்பட்டது. சிலருக்கு கால் எலும்பு முறிவும், சிலருக்கு கால் சுளுக்கும் ஏற்பட்டது. இவர்களை கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக மீட்டு கோயில் முதலுதவி மருத்துவ மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காணாமல் போன எச்சரிக்கை பதாகைகள் - கடலில் நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் ஆபத்து

திருச்செந்தூர் கோயில் கடல் பகுதி பாறைகள் நிறைந்த பகுதியாகும். அதிலும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது நீராடும் பக்தர்களுக்கு பாறை இருப்பது தெரியாமல் சில சமயங்களில் அதில் இழுத்து செல்லப்பட்டு சிக்கி விடுவது உண்டு. இதனாலே பலமுறை பலருக்கு கால் முறிவு மற்றும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். முந்தைய  காலங்களில் கோயில் கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதி என பக்தர்களுக்கு எச்சரிக்கை செய்யும் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அந்த போர்டும் காணாமல் போய்விட்டது. கடல் பாறைகள் இருப்பது தெரியாமல் ஆபத்தை உணராமல் குளிக்கும்போது விபரீத நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இனி வருங்காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பாறையில் குறித்து எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget