மேலும் அறிய

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்! பக்தர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? முழு விபரம் இதோ!

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 27 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 27 ஆம் தேதி அன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்! பக்தர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? முழு விபரம் இதோ!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் தான் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27ஆம் தேதியும், திருக்கல்யாணம் வைபவம் வரும் அக்டோபர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 27ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளார். ஆனால் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடுசெய்ய இரண்டாம் சனிக்கிழமையான நவம்பர் 8ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். அதன்படி, அக்டோபர் 22ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கப்பட்டது. அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை விரத நாட்கள் (சஷ்டி விரதம்) கடைப்பிடிக்கப்படும்.


திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்! பக்தர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? முழு விபரம் இதோ!

இந்த நிகழ்வின் முக்கிய தினமாக சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலை நடை திறப்பு, யாக சாலை பூஜை நிறைவு. மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.அக்டோபர் 28ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதிகாலை நடை திறப்பு. மாலை 6:30 மணிக்கு தெய்வானை அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்தல் மற்றும் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 01ஆம் தேதி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். பின்னர் நவம்பர் 2ஆம் தேதி ஊஞ்சல் சேவை மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவுபெறும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?
Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?
Embed widget