மேலும் அறிய

சாகர்மாலா திட்டங்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு - மீனவர்கள்

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும்- மீனவர்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மீன்வளத்துறை இணை இயக்குனர் காசிநாதபாண்டியன், உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்வளக்கல்லூரி உதவி பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மீனவர்களுக்கான கடன் அட்டை திட்டம், அதனால் மீனவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் மீனவ பெண்கள் இணைவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், மீனவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் மீனவர்கள் பேசும் போது, கடலில் மீனவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடற்கரை பகுதியில் 24 மணி நேர ஆம்புலன்சு வசதி செய்ய வேண்டும். கடந்த 18-ம் தேதி இரவில் புன்னக்காயல் அருகே மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதி வழியாக சென்ற கப்பலால் 10 வலைகள் சேதமடைந்து உள்ளன. இது தொடர்பாக துறைமுக அதிகாரிகளிடம் கேட்டால் ஆதாரம் கேட்கின்றனர். சாகர்மாலா போன்ற வளர்ச்சி திட்டங்களால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கடம்பாகுளத்தில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலில் 24 மணி நேரமும் சுற்றி வரும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு படகை தயார் செய்து கடல் ஆம்புலன்ஸ் சேவையாக மீன்வளத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். சிறிய மாவட்டமான கன்னியாகுமரியில் 3 உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் ஒரு துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் மட்டும் தான் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இதனால் மீனவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்செந்தூரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தொடங்க வேண்டும்.


சாகர்மாலா திட்டங்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு - மீனவர்கள்

அண்ணா மேலாண்மை நிறுவனம் மூலம் மீனவ மாணவர்களுக்கு குடியுரிமை தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிப்பெண் 80 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மதிப்பெண்ணை 50 அல்லது 60 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குகுளி மீனவர்கள் முறையற்ற முறையில் சங்குகுளி தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் கடலில் சங்கு வளம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். தருவைகுளத்தில் உள்ள ஓடையின் முகத்துவராத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சங்குகுளி தொழில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராம்பரியமாக நடைபெறுகிறது. உயிருள்ள சங்குகளை நாங்கள் எடுப்பதில்லை. இறந்த சங்குகளை மட்டுமே எடுக்கிறோம். இதனால் யாருக்கும், எந்த வகையிலும் பாதிப்பு கிடையாது. பாரம்பரிய சங்குகுளி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். காயல்பட்டினம் சிங்கித்துறையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். புன்னக்காயல் கிராமத்துக்கு பஸ்வசதி, முறையான குடிநீர், மின்வாரிய ஒயர்மேன் வசதி செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசும் போது, தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும். வலைகளை கப்பல் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்கள் கிசான் கிரெடிட் கார்டு என்ற மீனவர் கடன் அட்டையை அதிகமாக பெற்று பயன் பெற வேண்டும். மேலும், பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள படிப்பகம், நகராட்சி பகுதியில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை மீனவ இளைஞர்கள் நல்ல முறையின் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அளிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளிலும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரபு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget