மேலும் அறிய

தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - குஜராத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு

பெருமழையால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உப்பு விலை ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது உப்பு தன் ஒன்றுக்கு ரூ. 4000 முதல் 4500 வரை விற்கப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையிலான கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் நடைப்பெற்று வருகிறது இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் துவங்கும் பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் 6 மாத காலம் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலமாக உள்ளது அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியதும் உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும.


தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - குஜராத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு

உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு  லாரிகளில் ஏற்றுதல்,  உப்பு பண்டல் கட்டுதல், உப்பு  பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு  கூடையுடன் தலையில் சுமந்து உப்பு  அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது.


தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - குஜராத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த அதிக கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களை உருக்குலைத்து உள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ 100 கோடி மதிப்பிலான 6 இலட்சம் டன் உப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலந்தது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களை சீரமைத்து அடுத்த சீசன் உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர்.உப்பளங்களில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றுதல், சமன்படுத்துதல்,கரைகளை சீரமைத்தல், ஆழ்துளை கிணறுகளை சரி செய்தல், மின் இணைப்புகளை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். சேதம் மிக அதிகம் என்பதால் சீரமைப்பு பணிகளுக்கு பல மடங்கு செலவாகும் என கூறும் உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி மூன்று மாதங்கள் வரை தாமதமாகும் என்கின்றனர்.


தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - குஜராத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு

இதுகுறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, “வழக்கமாக மழைக்காலம் நிறைவடைந்ததும் உப்பளங்களை சீரமைக்க ஏக்கருக்கு ரூ 25,000 முறை செலவாகும் தற்போது அது கிட்டத்தட்ட 4 மடங்கு 5 மடங்கு உயர்ந்து 2 லட்சம் வரை செலவாகும் நிலை உள்ளது. மழைநீர் அதிகமாக தேங்கியதால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரின் உப்பு அடர்த்தி குறைவாக இருக்கும், எனவே தரமான உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வருவதற்கு ஓரிரு மாதங்கள் வரை ஆகலாம். உப்பளங்களில் சீரமைப்பு பணிகளை முடித்து முழுமையான உற்பத்தி மே மாதம் தான் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக கூறும் இவர்கள், இதனால் இந்த ஆண்டு 50 சதவீத அளவுக்கு உப்பு உற்பத்தி இருக்கும் என்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 4 லட்சம் டன் அளவுக்குத்தான் உப்பு கையிருப்பில் உள்ளது. வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே இது போதுமானதாக இருக்கும், அதற்குள் ஆங்காங்கே சிறிய அளவிலாவது உப்பு உற்பத்தியை துவங்கினால் நிலைமையை சமாளிக்கலாம் இல்லையெனில் வெளி மாநிலத்திலிருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை வரும்” என்கிறார்.


தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - குஜராத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு

தூத்துக்குடியில் மழைக்கு முன்பு ஒரு டன் உப்பு 3000 முதல் 3500 வரை விற்கப்பட்டது. பெருமழையால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உப்பு விலை ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது உப்பு தன் ஒன்றுக்கு ரூ. 4000 முதல் 4500 வரை விற்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget