மேலும் அறிய

மழை வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு புத்தகம் எழுதிய சிறுவன்

வரலாறு காணாத கனமழை பெரு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு உதவி கரம் நீட்டிய மனிதநேயமிக்க செயல் 10 வயது மாணவனை எழுத்தாளராக மாற்றி உள்ளது.

10 வயது சிறுவனால் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை பெருவெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800 பயணிகளுடன் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு ஹியூமனிட்டி வின்ஸ் என்ற தலைப்பில் உருவாக்கிய ஆங்கில புத்தகம் நெல்லை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு புத்தகத்தை வெளியிட நெல்லை மாவட்ட ஆட்சியர் அதனைப் பெற்றுக் கொண்டார்.


மழை வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு புத்தகம் எழுதிய  சிறுவன்

நெல்லையை சேர்ந்த மென்பொருள் நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை என்பவரின் 10 வயது மகன் கவின் விக்னேஷ் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெருவெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்த்து வேதனை அடைந்துள்ளார்.


மழை வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு புத்தகம் எழுதிய  சிறுவன்

மேலும் மழை பெரு வெள்ளத்தில் திருச்செந்தூரில் 800 பயணிகளுடன் இருந்து புறப்பட்டு தண்டவாள அரிப்பு காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கித் துவைத்த ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் உடனடியாக உணவு உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து உதவிய மனிதநேய செயல் குறித்தும் தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளார்.மேலும் மழை பெரு வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயமிக்க செயல் மாணவனை பெரிதும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவங்களை மனதில் வைத்து ஹியூமானிட்டி வின்ஸ் என்ற தலைப்பில் ஆங்கில புத்தகம் ஒன்றை அந்த மாணவன் எழுதியுள்ளார். புத்தகம் முழுதும் முடிவு பெற்ற நிலையில் புத்தகத்தை வெளியிட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்த நிலையில் நெல்லையில் நடந்து வரும் பொருநை புத்தக திருவிழாவில் வெளியிடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெல்லை புத்தக திருவிழாவில் 10 வயது மாணவன் கவின் விக்னேஷ் எழுதிய புத்தகம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


மழை வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு புத்தகம் எழுதிய  சிறுவன்

புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு வெளியிட நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் சிக்கிய போது பணியில் இருந்த நிலைய மேலாளர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வரலாறு காணாத கன மழை பெரு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு உதவி கரம் நீட்டிய மனிதநேயமிக்க செயல் 10 வயது மாணவனை எழுத்தாளராக மாற்றி உள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


மழை வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு புத்தகம் எழுதிய  சிறுவன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget