மேலும் அறிய

டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இந்த பாலத்தை சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே 2 டெண்டர் கோரப்பட்டு யாரும் டெண்டர் எடுக்கவில்லை.

தூத்துக்குடி-பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே மழையால் சேதம் அடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                      தேசிய நெடுஞ்சாலை

கன்னியாகுமரி - காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்தச் சாலையில் வல்லநாடுபகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. 


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

இதே போன்று ஆங்காங்கே ஓடைகள், கால்வாய்கள் மீது பாலங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் கோரம்பள்ளம் குளம் நீர் வரத்துக் கால்வாய் குறுக்கே பாலம் அமைந்து தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கிறது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக இந்த சாலை அமைந்து உள்ளது.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                 மழையால் சேதமடைந்த பாலம்

கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே நேரத்தில் பல்வேறு விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சேதம் அடைந்த பாலத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த சாலையில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகையால் பாலத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                                      3-வது டெண்டர்

அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இந்த பாலத்தை சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே 2 டெண்டர் கோரப்பட்டு யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இதனால் 3-வது டெண்டர் கோரப்படுகிறது. அதிலும் யாரும் எடுக்காதபட்சத்தில் மதுரை மண்டல அலுவலர் நேரடியாக பணியை மேற்கொள்ள முடியும். இதனால் விரைவில் பாலம் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                               வாகன ஓட்டிகள் அவதி

இதுகுறித்து கனரக வாகன ஓட்டுநர்களிடம் கேட்டபோது, தூத்துக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜன் கூறும் போது, போன வருசம் பெய்த மழையால் இந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு பாலத்தை சீரமைக்காமல் தற்காலிக சாலை வழியா தான் போயிட்டு வாரோம். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் சுங்கச்சாவடியில் கட்டணம்  வசூலிப்பதை மட்டும் நிறுத்தவே இல்ல. ஏற்கனவே வல்லநாடு பாலத்தில் அப்பப்போ ஏற்படும் பாதிப்பின் காரணமாக வாகனத்தை ஓட்டுவதில் சிரமம். இப்போ இது வேற... நெடுஞ்சாலைத்துறை கொஞ்சம் கண் திறந்து பார்க்கனும் என்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி
தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: உண்மையை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி கடும் தாக்கு!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: உண்மையை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி கடும் தாக்கு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget