மேலும் அறிய

டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இந்த பாலத்தை சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே 2 டெண்டர் கோரப்பட்டு யாரும் டெண்டர் எடுக்கவில்லை.

தூத்துக்குடி-பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே மழையால் சேதம் அடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                      தேசிய நெடுஞ்சாலை

கன்னியாகுமரி - காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்தச் சாலையில் வல்லநாடுபகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. 


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

இதே போன்று ஆங்காங்கே ஓடைகள், கால்வாய்கள் மீது பாலங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் கோரம்பள்ளம் குளம் நீர் வரத்துக் கால்வாய் குறுக்கே பாலம் அமைந்து தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கிறது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக இந்த சாலை அமைந்து உள்ளது.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                 மழையால் சேதமடைந்த பாலம்

கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே நேரத்தில் பல்வேறு விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சேதம் அடைந்த பாலத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த சாலையில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகையால் பாலத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                                      3-வது டெண்டர்

அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இந்த பாலத்தை சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே 2 டெண்டர் கோரப்பட்டு யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இதனால் 3-வது டெண்டர் கோரப்படுகிறது. அதிலும் யாரும் எடுக்காதபட்சத்தில் மதுரை மண்டல அலுவலர் நேரடியாக பணியை மேற்கொள்ள முடியும். இதனால் விரைவில் பாலம் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


டிசம்பர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு வழிச்சாலை பாலம்- தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூல்?

                                                                               வாகன ஓட்டிகள் அவதி

இதுகுறித்து கனரக வாகன ஓட்டுநர்களிடம் கேட்டபோது, தூத்துக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜன் கூறும் போது, போன வருசம் பெய்த மழையால் இந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு பாலத்தை சீரமைக்காமல் தற்காலிக சாலை வழியா தான் போயிட்டு வாரோம். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் சுங்கச்சாவடியில் கட்டணம்  வசூலிப்பதை மட்டும் நிறுத்தவே இல்ல. ஏற்கனவே வல்லநாடு பாலத்தில் அப்பப்போ ஏற்படும் பாதிப்பின் காரணமாக வாகனத்தை ஓட்டுவதில் சிரமம். இப்போ இது வேற... நெடுஞ்சாலைத்துறை கொஞ்சம் கண் திறந்து பார்க்கனும் என்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி-காச்சிகுடா நேரடி ரயில் சேவை: பயணிகளுக்கு காத்திருக்கும் புதிய வாய்ப்பு! முழு விபரம் இதோ!
தூத்துக்குடி-காச்சிகுடா நேரடி ரயில் சேவை: பயணிகளுக்கு காத்திருக்கும் புதிய வாய்ப்பு! முழு விபரம் இதோ!
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்! கச்சிகுடா ரயில் சேவை நிரந்தரமாகிறது, நேரடி ரயில் இணைப்பு!
தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்! கச்சிகுடா ரயில் சேவை நிரந்தரமாகிறது, நேரடி ரயில் இணைப்பு!
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Trump Eyes on Cuba: அடுத்த டார்கெட் ஃபிக்ஸ்; கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப்; எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டார் பாருங்க
அடுத்த டார்கெட் ஃபிக்ஸ்; கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப்; எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டார் பாருங்க
திமுக - கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி !! சண்முகம் பரபரப்பு பேட்டி
திமுக - கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி !! சண்முகம் பரபரப்பு பேட்டி
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Embed widget