மேலும் அறிய

தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்

தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ள அரசு அதிகாரிகளும் விடுதிகளில் தங்கி உள்ளதால் எந்த விடுதியிலும் தங்கும் அறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக நிரம்பியது. இதனால் குளத்தில் உள்ள 24 கண் மதகு திறக்கப்பட்டது. இதனால் உப்பாற்று ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கோரம்பள்ளம் குளத்தில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. இதில் அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து மறவன்மடம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மாநகருக்குள் புகுந்தது.


தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்

இந்த வெள்ளத்தால் மாநகரம் 4 நாட்களாக தத்தளித்துக் கொண்டு இருந்தது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் உடனடியாக வெயில் அடித்து வருவதால் பெரிய அளவில் பாதிப்பு இன்றி மழைநீர் வடியத் தொடங்கி உள்ளது. பாளையங்கோட்டை ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு 2 அடிக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று இந்த தண்ணீர் வடிந்ததால் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், கார்களிலும் அந்த ரோட்டில் மக்கள் பயணிக்க தொடங்கி இருக்கின்றனர். அதே போன்று தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்

தூத்துக்குடி மீளவிட்டான் அருகே ரெயில் பாதையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளநீர் வெளியேறியதால் அந்த பகுதியில் ரெயில் பாதை சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்துக்கு தகுதியாக இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டன. அதே போன்று விமான சேவையும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்

அதே நேரத்தில் தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் ஓரளவு மழை வெள்ளம் வடிய துவங்கினாலும் அவ்வப்போது பெய்யும் மழையால் வெள்ள பாதிப்பு தொடர்கிறது. பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. முத்தம்மாள்காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, இந்திராநகர், போல்டன்புரம், கால்டுவெல்காலனி, கோயில்பிள்ளை நகர், தெர்மல்நகர், தாளமுத்துநகர் வண்ணார் பேட்டை, டி.சவேரியார்புரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகு, பரிசல்கள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்

மேலும் சிலர் அவர்களின் வீடுகளிலேயே தங்கி உள்ளனர். அவர்கள் போதிய உணவு வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பால், குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்று வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விரைந்து நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ள அரசு அதிகாரிகளும் விடுதிகளில் தங்கி உள்ளதால் எந்த விடுதியிலும் தங்கும் அறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget