மேலும் அறிய

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.

திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியதாவது,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். திருச்செந்தூர் நகர பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.


திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கோயில் வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களிடம் பேசி மாடுகளை வெளியில் விடாமல் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.திருச்செந்தூருக்கு நெல்லையில் இருந்து 60 பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து 40 பேருந்துகள், மதுரையில் இருந்து 60 பேருந்துகள், ராஜபாளையத்தில் இருந்து 15 பேருந்துகள் உள்பட சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகள் திருச்செந்தூர் ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதே போன்று நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் தனியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.


திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கடலில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் 5 படகுகளில் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். செல்போன்கள் சீராக இயங்குவதற்காக 6 செல்போன் கோபுரங்கள் உள்ளன. மேலும் 2 நகரும் செல்போன் கோபுரங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்படும். விழாவின் போது பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையினர் உதவியுடன், அந்த பக்தரை அங்கிருந்து வெளியேற்றி கொண்டு வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தீயணைப்புத் துறை சார்பில் கோயில் வளாகத்தில் 7 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதே போன்று 40 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். பக்தர்கள் வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் பாதுகாப்புப் பணியில் 144 தனியார் காவலர்கள் உள்ளனர். இது தவிர முதல் 3 நாட்கள் கூடுதலாக 50 பேரும், அடுத்த 3 நாட்கள் கூடுதலாக 100 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை சார்பில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவுக்கு முன்பு அனைத்து தெரு விளக்குகளும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: நாளை முதல் 2வது ரவுண்ட்.. உதயமாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
TN Weather: நாளை முதல் 2வது ரவுண்ட்.. உதயமாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
அதிமுக-பாஜக கூட்டணி: அன்புமணி ராமதாஸ் அதிரடி! 30 தொகுதிகள், ராஜ்ய சபா சீட் அன்புமணியின் பலே பிளான்!
அதிமுக-பாஜக கூட்டணி: அன்புமணி ராமதாஸ் அதிரடி! 30 தொகுதிகள், ராஜ்ய சபா சீட் அன்புமணியின் பலே பிளான்!
Bihar ‘INDIA‘ CM Candidate: பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar  | ராகுலை ஓரங்கட்டிய தேஜஸ்வி கடும் நெருக்கடியில் காங்கிரஸ்! எகிறி அடிக்கும் கூட்டணிக்கட்சிகள்
Dharmapuri Collector : மழையால் இடிந்த வீடு! SPOT-க்கு விரைந்த கலெக்டர் அதிரடி நடவடிக்கை
Taliban vs Pakistan Army | ‘’ஆம்பளையா இருந்தா வாடா” ராணுவ தளபதிக்கு மிரட்டல்தாலிபன் வெளியிட்ட வீடியோ
Child dies in rainwater | தேங்கி நின்ற மழைநீர்! மூழ்கி உயிரிழந்த குழந்தை! கையில் DRESS. கதறி அழுத தாய்
தாமதமாகும் DGP நியமனம்! மத்திய அரசு கொடுத்த LIST! கடுப்பான தமிழக அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: நாளை முதல் 2வது ரவுண்ட்.. உதயமாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
TN Weather: நாளை முதல் 2வது ரவுண்ட்.. உதயமாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
அதிமுக-பாஜக கூட்டணி: அன்புமணி ராமதாஸ் அதிரடி! 30 தொகுதிகள், ராஜ்ய சபா சீட் அன்புமணியின் பலே பிளான்!
அதிமுக-பாஜக கூட்டணி: அன்புமணி ராமதாஸ் அதிரடி! 30 தொகுதிகள், ராஜ்ய சபா சீட் அன்புமணியின் பலே பிளான்!
Bihar ‘INDIA‘ CM Candidate: பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Rohit Sharma: கவிழ்த்த கிங்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய ஹிட்மேன் - தெ.ஆப்., ரோகித் டிக்கெட் கன்ஃபார்ம்
Rohit Sharma: கவிழ்த்த கிங்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய ஹிட்மேன் - தெ.ஆப்., ரோகித் டிக்கெட் கன்ஃபார்ம்
Russia Nuclear Drill: ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
Embed widget