மேலும் அறிய

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.

திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியதாவது,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். திருச்செந்தூர் நகர பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.


திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கோயில் வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களிடம் பேசி மாடுகளை வெளியில் விடாமல் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.திருச்செந்தூருக்கு நெல்லையில் இருந்து 60 பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து 40 பேருந்துகள், மதுரையில் இருந்து 60 பேருந்துகள், ராஜபாளையத்தில் இருந்து 15 பேருந்துகள் உள்பட சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகள் திருச்செந்தூர் ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதே போன்று நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் தனியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.


திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கடலில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் 5 படகுகளில் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். செல்போன்கள் சீராக இயங்குவதற்காக 6 செல்போன் கோபுரங்கள் உள்ளன. மேலும் 2 நகரும் செல்போன் கோபுரங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்படும். விழாவின் போது பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையினர் உதவியுடன், அந்த பக்தரை அங்கிருந்து வெளியேற்றி கொண்டு வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தீயணைப்புத் துறை சார்பில் கோயில் வளாகத்தில் 7 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதே போன்று 40 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். பக்தர்கள் வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் பாதுகாப்புப் பணியில் 144 தனியார் காவலர்கள் உள்ளனர். இது தவிர முதல் 3 நாட்கள் கூடுதலாக 50 பேரும், அடுத்த 3 நாட்கள் கூடுதலாக 100 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை சார்பில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவுக்கு முன்பு அனைத்து தெரு விளக்குகளும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.
திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.
விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Embed widget