தூத்துக்குடியில் ரெளடி கும்பல் மோதல்: வீட்டில் பதுக்கிய 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!
தென்பாகம் காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி சீனு என்பவர் உப்பளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் ரெளடி கும்பல் மோதல் எதிரொலியாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 நாட்டு வெடிகுண்டுகளை போலிசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த கும்பல் ஒன்று தனிப்பிரிவு போலிசாரிடம் சிக்கியது. அந்த கும்பலிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கபில்தேவ், அஜித்குமார் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், இருவரின் வீட்டிலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அஜித்குமாரின் மனைவி எஸ்தர் மற்றும் மாமியார் ரீத்தம்மாள் ஆகியோர் வசித்து வரும் வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பையில் 8 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வல்லநாடு மலை அடிவாரத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, தொழில்நுட்ப ரீதியாக செயலிழக்கச் செய்தனர்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி சீனு என்பவர் உப்பளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் கபில்தேவ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் சீனுவின் நண்பரான ஜப்பான் அஜித் என்பவருக்கும் கபில்தேவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இருவரும் தனித்தனி கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். அஜித் கும்பலை பழிவாங்க கபில்தேவ் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. அஜித்குமார் மீது 8 வழக்குகளும், கபில்தேவ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைபதுக்கி வைத்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















