தூத்துக்குடி ஒரு முக்கிய தொழில் மற்றும் ஆன்மீகத் தலமாக இருப்பதால், தற்போதுள்ள ஒரே ஒரு ரயில் சேவை போதாது. எனவே, கூடுதலாக ஒரு ரயில் தேவைப்படுகிறது.
Chennai-Tuticorin Vande Bharat: முத்து நகர் மக்களே தித்திப்பான நியூஸ்! விரைவில் வந்தே பாரத் சேவை.. எப்போ தொடங்குகிறது?
Chennai to Thoothukudi Vande Bharat Train: தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு புதிய 'வந்தே பாரத்' (Vande Bharat Express) அதிவேக ரயிலை இயக்க வேண்டும் எனத் தெற்கு ரயில்வே மற்றும் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை மற்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரம்:
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான தூத்துக்குடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். உப்பு, முத்துக்குளித்தல், மீன் ஏற்றுமதி உள்ளிட்ட முக்கிய வணிக ஏற்றுமதிகள் இங்கு தினம் தோறும் நடைப்பெறுகிறது. இதுமட்டுமின்றி திருச்செந்தூர் முருகன் கோவில், மணப்பாடு, திருவைகுண்டம் உள்ளிட்ட முக்கிய வழிப்பாட்டு தலங்கள் தூத்துக்குடியை சுற்றி உள்ளது.
இதற்காக சென்னையில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், விமானங்கள் என தூத்துக்குடிக்கு போக்குவரத்து சேவை வழங்குகின்றன.
ஒரே ஒரு ரயில்:
சாலை மற்றும் ஆகாய மார்க்கமாக தூத்துக்குடிக்கு நிறைய போக்குவரத்து சேவை இருந்தாலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி ஒரே ஒரு ரயில் சேவை தான் உள்ளது. தலைநகரான சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது முத்து நகர் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பெரிய நகரத்திற்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளதால் கூடுதலாக ஒரு ரயில் வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வந்தே பாரத் ரயில்:
தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 'முத்துநகர் எக்ஸ்பிரஸ்' மட்டுமே பிரதான ரயிலாக உள்ளது. தூத்துக்குடி ஒரு முக்கியமான தொழில் நகரமாகவும், திருச்செந்தூர் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மாவட்டமாகவும் இருப்பதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.
9 மணி நேரத்திற்குள் சென்றடையலாம்:
சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரை, வாஞ்சி மணியாச்சி வழியாகத் தூத்துக்குடிக்கு இந்த வந்தே பாரத் ரயில் சேவையானது இயக்கப்பட்டால், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், பயோ டாய்லெட் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெறும்.
Frequently Asked Questions
தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை ஏன் எழுந்துள்ளது?
புதிய வந்தே பாரத் ரயிலில் என்னென்ன நவீன வசதிகள் இருக்கும்?
இந்த ரயிலில் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், பயோ டாய்லெட் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற நவீன வசதிகள் இடம்பெறும்.
வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டால், சென்னையில் இருந்து தூத்துக்குடியை எவ்வளவு நேரத்தில் சென்றடையலாம்?
இந்த ரயில் சேவை மூலம், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
தற்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 'முத்துநகர் எக்ஸ்பிரஸ்' என்ற ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.
























