மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

’’தூத்துக்குடியில் பழங்குடியினர் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கத்துடன் கூடிய போக்குவரத்து பூங்கா ஆகியவை கட்டப்பட்டுள்ளது’’

இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 73.32 லட்சம் செலவில் பழங்குடியினர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  1000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், ஸ்மார்ட் சாலைகள், அறிவியல் பூங்காக்கள் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு பெரிய அளவிலான அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. 6.28 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகத்தில் 4 வகையான பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவியர் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் 'போக்குவரத்து பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து சிக்னல்கள், சாலை விதிகள் குறித்த அம்சங்கள் இடம் பெறுவதுடன்  கோளரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும், தமிழகத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 'ஐந்திணை பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதனை தவிர நான்காவதாக இந்தியாவின் பழங்குடியினர் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவை அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் அமைத்துக் கொடுக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள தோடர், இருளர், பனியர் உள்ளிட்ட 12 முக்கியமான பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, தொழில், குடியிருப்பு போன்றவற்றை சித்தரித்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதற்காக தத்ரூபமான சிலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவின் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை இன்றைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பூங்காக்களின் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள பூங்காங்களை விரைவில் முதல்வர் திறக்க உள்ளதாக என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவில் .28.31 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த 'ஸ்டெம்' பூங்காவாக (STEM: Science, Technology, Engineering and Maths) இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புறக் கண்காட்சிகள், ஒரு கோளத்தின் அறிவியல், மெய்நிகர் கண்காட்சிக் கூடம், கண்டுபிடிப்பு மையம் போன்றவை அமைக்கப்படுகின்றன.

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget