மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

’’தூத்துக்குடியில் பழங்குடியினர் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கத்துடன் கூடிய போக்குவரத்து பூங்கா ஆகியவை கட்டப்பட்டுள்ளது’’

இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 73.32 லட்சம் செலவில் பழங்குடியினர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  1000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், ஸ்மார்ட் சாலைகள், அறிவியல் பூங்காக்கள் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு பெரிய அளவிலான அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. 6.28 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகத்தில் 4 வகையான பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவியர் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் 'போக்குவரத்து பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து சிக்னல்கள், சாலை விதிகள் குறித்த அம்சங்கள் இடம் பெறுவதுடன்  கோளரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும், தமிழகத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 'ஐந்திணை பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதனை தவிர நான்காவதாக இந்தியாவின் பழங்குடியினர் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவை அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் அமைத்துக் கொடுக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள தோடர், இருளர், பனியர் உள்ளிட்ட 12 முக்கியமான பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, தொழில், குடியிருப்பு போன்றவற்றை சித்தரித்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதற்காக தத்ரூபமான சிலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவின் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை இன்றைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பூங்காக்களின் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள பூங்காங்களை விரைவில் முதல்வர் திறக்க உள்ளதாக என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவில் .28.31 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த 'ஸ்டெம்' பூங்காவாக (STEM: Science, Technology, Engineering and Maths) இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புறக் கண்காட்சிகள், ஒரு கோளத்தின் அறிவியல், மெய்நிகர் கண்காட்சிக் கூடம், கண்டுபிடிப்பு மையம் போன்றவை அமைக்கப்படுகின்றன.

தலைப்பு செய்திகள்

Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Embed widget