மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

’’தூத்துக்குடியில் பழங்குடியினர் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கத்துடன் கூடிய போக்குவரத்து பூங்கா ஆகியவை கட்டப்பட்டுள்ளது’’

இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 73.32 லட்சம் செலவில் பழங்குடியினர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  1000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், ஸ்மார்ட் சாலைகள், அறிவியல் பூங்காக்கள் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு பெரிய அளவிலான அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. 6.28 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகத்தில் 4 வகையான பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவியர் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் 'போக்குவரத்து பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து சிக்னல்கள், சாலை விதிகள் குறித்த அம்சங்கள் இடம் பெறுவதுடன்  கோளரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும், தமிழகத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 'ஐந்திணை பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதனை தவிர நான்காவதாக இந்தியாவின் பழங்குடியினர் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவை அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் அமைத்துக் கொடுக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள தோடர், இருளர், பனியர் உள்ளிட்ட 12 முக்கியமான பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, தொழில், குடியிருப்பு போன்றவற்றை சித்தரித்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதற்காக தத்ரூபமான சிலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவின் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை இன்றைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பூங்காக்களின் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள பூங்காங்களை விரைவில் முதல்வர் திறக்க உள்ளதாக என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவில் .28.31 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த 'ஸ்டெம்' பூங்காவாக (STEM: Science, Technology, Engineering and Maths) இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புறக் கண்காட்சிகள், ஒரு கோளத்தின் அறிவியல், மெய்நிகர் கண்காட்சிக் கூடம், கண்டுபிடிப்பு மையம் போன்றவை அமைக்கப்படுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget