மேலும் அறிய

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ். முன்னதாக மீனவர்கள் பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு வழக்கம்போல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மீன்பிடி சிறுசேமிப்பு நிவாரண தொகை, தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் தொகை நடப்பாண்டுக்கு  சுமார் 1000 மீனவர்களுக்கு இதுநாள்வரை நிவாரணம் வழங்காததை கண்டித்தும் உடன் வழங்க கோரியும் முத்துப்பேட்டை, துரைக்காடு, ஜாம்புவானோடை, செங்காங்காடு, தொண்டியக்காடு, ஆலங்காடு, கீழவாடியக்காடு, வடக்கு வெள்ளாதிக்காடு, கற்பகநாதர்குளம், முனங்காடு, கீழவாடியக்காடு, கரையங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்க சார்பில்  வரும் 18ந்தேதி முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு திருவள்ளுவர் சிலை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இதனையடுத்து  முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டம் குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தரப்பில் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, நாகப்பட்டினம் மீன்வள உதவி இயக்குநர் ஜெயராஜ், முத்துப்பேட்டை உதவி இயக்குநர் மோகன் குமார், காவல் ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரும் அதேபோல் போராட்ட குழு சார்பில் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் அதிகாரிகள் தரப்பில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்கள் பிரதம மந்திரி திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு அதன் காரணமாக நீக்கம் செய்யப்பட்ட 532‌ நபர்களுக்கு 01.04.2023 முதல் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, தேசிய மீனவர் நிவாரண தொகை மற்றும் மகளிர் சேமிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமை அதிகாரிகள் எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்ததின் அடிப்படையில் 18ந்தேதி அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இந்தநிலையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலில் முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பயணிகள் விடுதிக்கு வரும்படி மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து சுமார் 300மீனவர்களும் அங்கு காலை 11மணிக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் 12.30 மணிவரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் தொடர்புக்கொண்ட போது அதிகாரிகள் தரப்பில் சில நிமிடத்தில் எங்க வரணும் என்று சொல்கிறோம் அதுவரை அனைவரும் ரயில்வே நிலையம் வரும்படி கூறினார். இதனையடுத்து அனைத்து மீனவர்களும் அங்கு வந்தனர் அங்கு வந்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் சாலை மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். பின்னர் சந்தை அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு வரும்படி அதிகாரிகள் அழைத்தனர் இதனையடுத்து அணைத்து மீனவர்களும் பேரணியாக அங்கிருந்து புறப்பட்டு திருமண மண்டபம் வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget