மேலும் அறிய

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ். முன்னதாக மீனவர்கள் பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு வழக்கம்போல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மீன்பிடி சிறுசேமிப்பு நிவாரண தொகை, தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் தொகை நடப்பாண்டுக்கு  சுமார் 1000 மீனவர்களுக்கு இதுநாள்வரை நிவாரணம் வழங்காததை கண்டித்தும் உடன் வழங்க கோரியும் முத்துப்பேட்டை, துரைக்காடு, ஜாம்புவானோடை, செங்காங்காடு, தொண்டியக்காடு, ஆலங்காடு, கீழவாடியக்காடு, வடக்கு வெள்ளாதிக்காடு, கற்பகநாதர்குளம், முனங்காடு, கீழவாடியக்காடு, கரையங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்க சார்பில்  வரும் 18ந்தேதி முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு திருவள்ளுவர் சிலை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இதனையடுத்து  முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டம் குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தரப்பில் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, நாகப்பட்டினம் மீன்வள உதவி இயக்குநர் ஜெயராஜ், முத்துப்பேட்டை உதவி இயக்குநர் மோகன் குமார், காவல் ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரும் அதேபோல் போராட்ட குழு சார்பில் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் அதிகாரிகள் தரப்பில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்கள் பிரதம மந்திரி திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு அதன் காரணமாக நீக்கம் செய்யப்பட்ட 532‌ நபர்களுக்கு 01.04.2023 முதல் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, தேசிய மீனவர் நிவாரண தொகை மற்றும் மகளிர் சேமிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமை அதிகாரிகள் எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்ததின் அடிப்படையில் 18ந்தேதி அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இந்தநிலையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலில் முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பயணிகள் விடுதிக்கு வரும்படி மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து சுமார் 300மீனவர்களும் அங்கு காலை 11மணிக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் 12.30 மணிவரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் தொடர்புக்கொண்ட போது அதிகாரிகள் தரப்பில் சில நிமிடத்தில் எங்க வரணும் என்று சொல்கிறோம் அதுவரை அனைவரும் ரயில்வே நிலையம் வரும்படி கூறினார். இதனையடுத்து அனைத்து மீனவர்களும் அங்கு வந்தனர் அங்கு வந்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் சாலை மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். பின்னர் சந்தை அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு வரும்படி அதிகாரிகள் அழைத்தனர் இதனையடுத்து அணைத்து மீனவர்களும் பேரணியாக அங்கிருந்து புறப்பட்டு திருமண மண்டபம் வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

Seeman: சீமான் சொன்ன புதுக்கதை..! ”இலங்கையிலிருந்து ஃபோன் போட்டு கோரிக்கை வைத்த பிரபாகரன்”
சீமான் சொன்ன புதுக்கதை..! ”இலங்கையிலிருந்து ஃபோன் போட்டு கோரிக்கை வைத்த பிரபாகரன்”
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
செங்கல்பட்டு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மெட்ரோவில் பறக்கலாம்! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
செங்கல்பட்டு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மெட்ரோவில் பறக்கலாம்! தமிழக அரசின் அறிவிப்பு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
Embed widget