மேலும் அறிய

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ். முன்னதாக மீனவர்கள் பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு வழக்கம்போல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மீன்பிடி சிறுசேமிப்பு நிவாரண தொகை, தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் தொகை நடப்பாண்டுக்கு  சுமார் 1000 மீனவர்களுக்கு இதுநாள்வரை நிவாரணம் வழங்காததை கண்டித்தும் உடன் வழங்க கோரியும் முத்துப்பேட்டை, துரைக்காடு, ஜாம்புவானோடை, செங்காங்காடு, தொண்டியக்காடு, ஆலங்காடு, கீழவாடியக்காடு, வடக்கு வெள்ளாதிக்காடு, கற்பகநாதர்குளம், முனங்காடு, கீழவாடியக்காடு, கரையங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்க சார்பில்  வரும் 18ந்தேதி முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு திருவள்ளுவர் சிலை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இதனையடுத்து  முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டம் குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தரப்பில் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, நாகப்பட்டினம் மீன்வள உதவி இயக்குநர் ஜெயராஜ், முத்துப்பேட்டை உதவி இயக்குநர் மோகன் குமார், காவல் ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரும் அதேபோல் போராட்ட குழு சார்பில் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் அதிகாரிகள் தரப்பில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்கள் பிரதம மந்திரி திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு அதன் காரணமாக நீக்கம் செய்யப்பட்ட 532‌ நபர்களுக்கு 01.04.2023 முதல் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, தேசிய மீனவர் நிவாரண தொகை மற்றும் மகளிர் சேமிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமை அதிகாரிகள் எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்ததின் அடிப்படையில் 18ந்தேதி அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இந்தநிலையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலில் முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பயணிகள் விடுதிக்கு வரும்படி மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து சுமார் 300மீனவர்களும் அங்கு காலை 11மணிக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் 12.30 மணிவரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் தொடர்புக்கொண்ட போது அதிகாரிகள் தரப்பில் சில நிமிடத்தில் எங்க வரணும் என்று சொல்கிறோம் அதுவரை அனைவரும் ரயில்வே நிலையம் வரும்படி கூறினார். இதனையடுத்து அனைத்து மீனவர்களும் அங்கு வந்தனர் அங்கு வந்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் சாலை மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். பின்னர் சந்தை அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு வரும்படி அதிகாரிகள் அழைத்தனர் இதனையடுத்து அணைத்து மீனவர்களும் பேரணியாக அங்கிருந்து புறப்பட்டு திருமண மண்டபம் வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Embed widget