மேலும் அறிய

தஞ்சையில் இன்றும், நாளையும் காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வு

தஞ்சையில் காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறுகிறது. 

தஞ்சாவூர்: தஞ்சையில் காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறுகிறது.  இதில் ஆண்கள் 5200, பெண்கள் 1776 என மொத்தமாக 6976 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 621 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு போலீசில் உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்பு காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள், 20 நிரம்பியவராகவும், 30 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மற்றும் நாளை தேர்வு நடைபெறுகிறது.

முதன்மைத் எழுத்து தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மதியம் பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ் மொழி தகுதி தேர்வு மதியம் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று (சனிக்கிழமை) காவல்துறையில் பணியாற்றுவோரை தவிர மற்றவர்களுக்கு நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 5200, பெண்கள் 1776 என மொத்தமாக 6976 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வானது தஞ்சாவூர் மாவட்டத்தில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, சாஸ்திரா யுனிவர்சிட்டி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி என நான்கு கல்லூரிகளில் தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக சுமார் 400 போலீசார் தேர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு பரிசோதனைக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார். 

அதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையில் பணியாற்றுவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 899, பெண்கள் 201 என மொத்தமாக 1090 பேர் தேர்வு எழுதுகின்றனர். செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது. மாணவர்கள் சரியான நேரத்திற்குள் தேர்வு அறைக்குள் வரவேண்டும், செல்போன் எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுத் தேர்வில் பங்கேற்கலாம். தாழ்த்தப்பட்ட சாதி (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு (ஓபிசி) மூன்று ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்களின் தற்போதைய வயதிலிருந்து ராணுவப் பணியைக் கழித்துவிட்டு மூன்றாண்டுகளும் ஆகும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது இன்றியமையாத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகுதித் தேவை. இது எந்த ஸ்ட்ரீமிலும் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி இல்லை என்றால் சப்-இன்ஸ்பெக்டர் ஆக முடியாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Embed widget