மேலும் அறிய

World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு சட்ட திருத்தங்களைத் தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் யானைகளை கொண்டு வர யானை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. முன்பு இருந்தது போல யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக எந்த ஒரு தகவல்களும் வரவில்லை என்றாலும், வேட்டையாடுதல், வாழ்விட அழிப்பு, சிறைபிடிப்பது, தவறாக நடத்துவது போன்ற செயல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதனால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.


World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்

2012 -ம் ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி அன்று தான் முதன் முதலில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. தாய்லாந்தை தளமாகக் கொண்ட யானை மறு அறிமுகம் அறக்கட்டளை, கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் பாட்ரிசியா சிம்ஸுடன் இணைந்து சர்வதேச யானைகள் தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நாளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012 -ம் ஆண்டு முதல், சிம்ஸ் உலக யானைகள் தினத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.


World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்

பொதுவாக யானையினை கண்டால் காண கண் கோடி வேண்டும் என்பது போல யானையை பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியாது. யானையை பார்பதற்கு சற்று பயமாக உயர்ந்தாலும், யானை என்ற பெயரைக் கேட்டவுடனே நம் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். அது மட்டும் இன்றி தற்போதைய கால சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தை கூட கோயிலுக்கு சென்று யானையினை கண்டால் மன அழுத்தம் குறைந்து ஒருவித நிம்மதி கிடைப்பதாகவும் கூறுகின்றனர். 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். திருவிழாக்காலங்களில் சாமி புறப்பாட்டின் போது முன்னே அழகாக அசைந்தாடி வரும் யானையின் அழகை காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள்.


World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்

தமிழர்களுக்கும், யானைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது. மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் 'அல்லி அரசாணி மாலை' என்ற பாடல் தொகுப்பில் 'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' என்று பாடப்பட்டுள்ளது. மன்னர்கள் காலத்தில் யானைப்படை மிக முக்கியமானதாக கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரிய கோயில்களை கட்டுவதற்கு யானைகள் பல உதவிகள் செய்துள்ளன. யானைகள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றளவும் யானைகளை கோயில்களில் வைத்து பராமரித்து வருகின்றனர்.


World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்

அதேபோல தனியார் சிலரும் யானைகளை பராமரித்து வருகின்றனர். யானைகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதன் மூலம் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். யானை காலடி மண்ணை பூஜைக்கு பயன்படுத்துவது வழக்கம். யானையின் முடியில் மோதிரம் செய்து அணியும் பழக்கமும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. யானைகள் இருக்கும் கோயில்களில் யானைகளை இறைவனாக நினைத்து அவற்றுக்கு கஜ பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீர் அடங்கிய கலசத்தை யானை மீது வைத்து கொண்டு வரும் வழக்கம் காலம் தொட்டு இருந்து வருகிறது. 


World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக  கோயில்களில் குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு யானைகள் மட்டுமே உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதில், யானைகளை வாங்கவும், விற்கவும் அனுமதி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களுக்கு விரைவில் யானைகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு உலக யானைகள் தினத்திற்குள் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான திருக்கோயில்களுக்கு யானைகள் வரவேண்டும் என்பதே யானை ஆர்வலர்களின் மற்றும் இங்குள்ள யானை பிரியர்களின் எதிர்பார்ப்பாகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
மண்ணை வென்ற சோழனின் கண்ணீர் சாட்சியம்: பஞ்சவன்மாதேவீச்சரம் காட்டும் சோழர் கால பாச வரலாறு!
மண்ணை வென்ற சோழனின் கண்ணீர் சாட்சியம்: பஞ்சவன்மாதேவீச்சரம் காட்டும் சோழர் கால பாச வரலாறு!
அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Embed widget