மேலும் அறிய

எப்போங்க? படகு சவாரி விடுவது எப்போங்க: கடல் போல் காட்சியளிக்கும் சமுத்திரம் ஏரி

எப்போங்க... படகு சவாரி எப்போங்க என்று தஞ்சை மக்கள் வெகு ஆர்வமாக கேட்கின்றனர். எங்கு? எதற்கு தெரியுங்களா? 

தஞ்சாவூர்: எப்போங்க... படகு சவாரி எப்போங்க என்று தஞ்சை மக்கள் வெகு ஆர்வமாக கேட்கின்றனர். எங்கு? எதற்கு தெரியுங்களா? 

மிகவும் பழமையான சமுத்திரம் ஏரி

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி தஞ்சையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. பழமையான இந்த சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் 6 கிராமங்களில் உள்ள  1,116 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின்ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று‌ வந்ததாகவும் கூறப்படுகிறது.


எப்போங்க? படகு சவாரி விடுவது எப்போங்க: கடல் போல் காட்சியளிக்கும் சமுத்திரம் ஏரி

ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் நடந்த பல்வேறு பணிகள்

இந்த ஏரி எப்போதும் கடல் போல் காட்சி அளிக்கும். இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித் துறை சார்பில் இது‌ தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது. அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் இங்கு தங்கி குஞ்சு பொறிக்கும் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடமாக உருவாக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரி வசதியும் ஏற்படுப்பட்டது.

மேலும், பொழுது போக்கு மீன்பிடி பயிற்சித் தளமும் அமைக்கப்பட்டது. சிறுவர் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத் தலமாக அமைக்கப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்காக சறுக்கு மரம் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சமுத்திரம் ஏரி

அதனை கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இங்கு தினமும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து பொழுதை போக்கி செல்கின்றனர். கடந்த மார்ச் மாதம் சமுத்திரம் ஏரியில் 30 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருந்தது. அப்போது கோடை காலம் என்பதால்  கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த நீா் போதுமானதாக இருக்கும் என படகு சவாரி இயக்கவில்லை. ஆனால் தற்போது கல்லணை கால்வாயில் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு முழு கொள்ளளவில் தண்ணீர் உள்ளது. மேலும் சமுத்திரம் ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகளும் அகற்றப்பட்டு விட்டது.

பள்ளி காலாண்டு விடுமுறை

இந்த நிலையில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நிறைவு பெற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாலை வேளையில் பூங்காக்களுக்கு செல்வர். இதனால் மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள சுற்றுலா தலமாக மாறியுள்ள சமுத்திர ஏரியில் படகு சவாரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி
தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி
தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Embed widget