குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள்: வரும் 22ம் தேதி தஞ்சாவூரில் ஏலம்
ஏலத்திற்குண்டான வாகனங்கள் மேற்படி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும் தேதியான 22ம் தேதி அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 22ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என்று சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா குற்ற வழக்குகளில் இரண்டு மற்றும் மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மற்றும் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி இந்த வாகனங்கள் வரும் 22.12.2025 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்திற்குண்டான வாகனங்கள் மேற்படி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும் தேதியான 22ம் தேதி அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 22.12.2025 அன்று காலை 10 மணி வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000/- மற்றும் மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000/- முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் GST விற்பனை வரி 18 சதவீதத்தை சேர்த்து உடனே செலுத்திடவேண்டும்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நாள்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த பொது ஏலம் வரும் 26.12.2005 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்திற்குண்டான வாகனங்கள் மேற்படி பழைய ஆயுதப்படை மைதானத்தில் வரும் 26.12.2025 அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் 26ம் தேதி அன்று காலை07.30 முதல் 10 மணி வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரி 18 சதவீதம் ஆகியவற்றை சேர்த்து ஏலம் எடுத்த அன்றே உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





















