மேலும் அறிய

ஏழு டூ ஒன்பது நீங்க வரவே கூடாது... திருச்சி கலெக்டரின் அறிவிப்பு எதற்காக?

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது என்று தொடர்ந்து ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது.

தஞ்சாவூர்: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறும் திருச்சி என்று ஏபிபிநாடு செய்தி வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது என்று தொடர்ந்து ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது. கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில்தான் நகர் பகுதியில் சென்று வர வேண்டும். ஆனால் அனைத்து நேரத்திலும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து புகார்கள் எழுப்பி வந்தனர்.

ஏழு டூ ஒன்பது நீங்க வரவே கூடாது... திருச்சி கலெக்டரின் அறிவிப்பு எதற்காக?

முக்கியமாக பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக பால்பண்ணை சிக்னல், திருச்சி கன்டோன்மென்ட் சாலை, ரயிலடி ரவுண்டானா, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சாலை, உறையூர் பகுதி என்று பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும் பெண்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பழைய பால் பண்ணை ரவுண்டானா பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இந்நிலையில் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் வருவதற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மேற்படி நேரத்தில் திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி - பஞ்சப்பூர் மார்க்கத்தில் செல்ல வேண்டும். பஞ்சப்பூர்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் எல்லா இடைநில்லா பேருந்துகளும் (பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்கள்) பஞ்சப்பூர்- தஞ்சாவூர் பைபாஸ் (அரைவட்ட சுற்றுச்சாலை) மார்க்கத்தை பயன்படுத்த வேண்டும்.

திருவெறும்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு), வட்டார போக்குரத்து அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய ஒரு துணைக்குழு மேற்கண்ட நடைமுறைகளை ஆய்வு செய்து காலமுறையாக அறிக்கை அனுப்பி வைக்க ஏதுவாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை முறையாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் திருச்சி பால்பண்ணை மற்றும் திருச்சி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து விடும். இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள். அறிவிப்புடன் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தி தொழில் வளர்ச்சியில் வெகுவாக முன்னேற்றம் கண்டு வரும் திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
Embed widget