மேலும் அறிய

திருவாரூரில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் பாரதிதாசன் நகர் ஆறாம் நம்பர் வாய்க்கால் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாலை மன்னார்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்த திருமகோட்டை அடுத்த மேலநத்தம் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, சரவணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரித்ததில் இருவரும் சேர்ந்து பாண்டிச்சேரியிலிருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து அதனில் ரசாயன பவுடர் கலந்து போலியாக மது பானம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

திருவாரூரில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
 
இதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவின்பேரில் சரவணன் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி என்பவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்ததன் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார் இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் நகலை மன்னார்குடி ஆய்வாளர் விசுவநாதன் நாகை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி என்பவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

திருவாரூரில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
 
இதேபோன்று பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய தென்கோவனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ராஜ்குமார் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget