மேலும் அறிய

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் அரசின் உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மாணவர்கள்.

திருவாரூர் நகர் 30 வார்டுகள் 65 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகராட்சி, இந்த திருவாரூரை  மாவட்டமாக கடந்த 1997ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊர் திருவாரூர். மேலும், தேர் உலக பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் பிரசித்தி பெற்ற கோவில் நகரமாக திகழும் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பாரம்பிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக வரலாறு உண்டு, வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள். இப்படி சிறப்புக்கு மேல் சிறப்புகளும் மாவட்ட தலை நகரமாக கொண்ட இந்த திருவாரூரில் இதுநாள்வரை அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது மிகவும் ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் இப்பகுதி மக்களிடம் எழுப்பி உள்ளது. இதுநாள்வரை இப்பகுதி மாணவர்கள் அருகில் உள்ள அம்மையப்பன்  புலிவலம் போன்ற பகுதிக்கு நீண்டதூரம் சென்றுதான் கல்வி பயின்று வருகின்றனர். 


அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டம் 1997ம் ஆண்டு உதயமானது. திருவாரூர் ஒரு முக்கியமான நகரமாக உள்ளது. திருவாரூர் நகர் பகுதியில் மட்டும் 65 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த நகரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி என்பது இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. எப்படியாவது ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வரவேண்டும் என்று மக்களுடைய ஆசையாக உள்ளது. ஆனால் திருவாரூர் நகர் பகுதியில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அரசு உதவியுடனும் பெரிய பொருட்செலவு இல்லாமல் அவர்கள் படிப்பதற்கு வசதி இல்லாத நிலை உள்ளது. ஆகவே உடனடியாக தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.


அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

மேலும் தலைமையாசிரியர் ஈவேரா கூறுகையில், பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அரசு உதவிகளை பெற முடியாத நிலை உள்ளது. தற்போது அரசாங்கம் புதிதாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது சட்டத்தின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் பொழுது சிறப்பு ஒதுக்கீடு உண்டு என அறிவித்திருக்கிறார்கள். திருவாரூரில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் அதே போன்று மாணவர்கள் அரசு உதவிகளை பெற வேண்டும் என்ற இரண்டு காரணத்தினால் உடனடியாக அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரவேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
திருச்சியை உற்று நோக்குமா தலைநகர் டெல்லி... 4 எம்.பி.க்களின் குரல் இனி அதிரடிக்குமா?
திருச்சியை உற்று நோக்குமா தலைநகர் டெல்லி... 4 எம்.பி.க்களின் குரல் இனி அதிரடிக்குமா?
மத்தளம் போல் இருபுறமும் அடி... விவசாயிகள் வேதனை எதற்காக?
மத்தளம் போல் இருபுறமும் அடி... விவசாயிகள் வேதனை எதற்காக?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
Mahindra BE.07 Vs BE6: பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
Maternity leave for nurses : செவிலியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! ஊதியத்தோடு மகப்பேறு விடுப்பு இத்தனை மாதமா.?
செவிலியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! ஊதியத்தோடு மகப்பேறு விடுப்பு இத்தனை மாதமா.?
"தல ஃபார் எ ரீசன்"; அரையிறுதிப் போட்டியில் ஜெயிச்சதுக்கே தோனி தான் காரணமாம்; ட்ரெண்டாகும் ‘7‘
Embed widget