மேலும் அறிய

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் அரசின் உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மாணவர்கள்.

திருவாரூர் நகர் 30 வார்டுகள் 65 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகராட்சி, இந்த திருவாரூரை  மாவட்டமாக கடந்த 1997ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊர் திருவாரூர். மேலும், தேர் உலக பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் பிரசித்தி பெற்ற கோவில் நகரமாக திகழும் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பாரம்பிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக வரலாறு உண்டு, வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள். இப்படி சிறப்புக்கு மேல் சிறப்புகளும் மாவட்ட தலை நகரமாக கொண்ட இந்த திருவாரூரில் இதுநாள்வரை அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது மிகவும் ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் இப்பகுதி மக்களிடம் எழுப்பி உள்ளது. இதுநாள்வரை இப்பகுதி மாணவர்கள் அருகில் உள்ள அம்மையப்பன்  புலிவலம் போன்ற பகுதிக்கு நீண்டதூரம் சென்றுதான் கல்வி பயின்று வருகின்றனர். 


அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டம் 1997ம் ஆண்டு உதயமானது. திருவாரூர் ஒரு முக்கியமான நகரமாக உள்ளது. திருவாரூர் நகர் பகுதியில் மட்டும் 65 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த நகரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி என்பது இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. எப்படியாவது ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வரவேண்டும் என்று மக்களுடைய ஆசையாக உள்ளது. ஆனால் திருவாரூர் நகர் பகுதியில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அரசு உதவியுடனும் பெரிய பொருட்செலவு இல்லாமல் அவர்கள் படிப்பதற்கு வசதி இல்லாத நிலை உள்ளது. ஆகவே உடனடியாக தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.


அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

மேலும் தலைமையாசிரியர் ஈவேரா கூறுகையில், பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அரசு உதவிகளை பெற முடியாத நிலை உள்ளது. தற்போது அரசாங்கம் புதிதாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது சட்டத்தின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் பொழுது சிறப்பு ஒதுக்கீடு உண்டு என அறிவித்திருக்கிறார்கள். திருவாரூரில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் அதே போன்று மாணவர்கள் அரசு உதவிகளை பெற வேண்டும் என்ற இரண்டு காரணத்தினால் உடனடியாக அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரவேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Harley-Davidson X440 S Vs RE Guerrilla 450: மோதிப் பார்த்துடுவோம் வா.! ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
Embed widget