மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்

வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வலியுறுத்தினார்.
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார். அதுசமயம் திருவாரூர், திருநெய்பேர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, பெரும்புகளுர், சலிப்பேரி, நன்னிலம், திருப்பாம்புரம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு கேட்டு கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டு கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் கழகத்தினர் மூலம் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். தற்போது மேலும் கூடுதல் மழை பெய்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமான வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இளம் பயிராக இருப்பதால் அவைகளால் பெரும் தண்ணீரை எதிர்கொள்ள முடியாது. இதனால் பயிர் பாதிப்பு அதிகம் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூடுதல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தண்ணீரை வடித்தல் உள்ளிட்ட மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்துள்ளது. மேலும் கனமழை இருப்பதாக கூறப்படுவதால் மழைநீர் சூழும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளும் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார். அதுசமயம் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா?  எளிய வழிமுறை இதோ..!
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
Embed widget