மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்

வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வலியுறுத்தினார்.
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார். அதுசமயம் திருவாரூர், திருநெய்பேர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, பெரும்புகளுர், சலிப்பேரி, நன்னிலம், திருப்பாம்புரம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு கேட்டு கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டு கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் கழகத்தினர் மூலம் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். தற்போது மேலும் கூடுதல் மழை பெய்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமான வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இளம் பயிராக இருப்பதால் அவைகளால் பெரும் தண்ணீரை எதிர்கொள்ள முடியாது. இதனால் பயிர் பாதிப்பு அதிகம் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூடுதல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தண்ணீரை வடித்தல் உள்ளிட்ட மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்துள்ளது. மேலும் கனமழை இருப்பதாக கூறப்படுவதால் மழைநீர் சூழும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளும் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார். அதுசமயம் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
Embed widget