மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்

வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வலியுறுத்தினார்.
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார். அதுசமயம் திருவாரூர், திருநெய்பேர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, பெரும்புகளுர், சலிப்பேரி, நன்னிலம், திருப்பாம்புரம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு கேட்டு கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டு கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் கழகத்தினர் மூலம் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். தற்போது மேலும் கூடுதல் மழை பெய்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமான வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இளம் பயிராக இருப்பதால் அவைகளால் பெரும் தண்ணீரை எதிர்கொள்ள முடியாது. இதனால் பயிர் பாதிப்பு அதிகம் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூடுதல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தண்ணீரை வடித்தல் உள்ளிட்ட மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்துள்ளது. மேலும் கனமழை இருப்பதாக கூறப்படுவதால் மழைநீர் சூழும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளும் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார். அதுசமயம் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget