மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்

வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வலியுறுத்தினார்.
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார். அதுசமயம் திருவாரூர், திருநெய்பேர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, பெரும்புகளுர், சலிப்பேரி, நன்னிலம், திருப்பாம்புரம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு கேட்டு கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டு கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் கழகத்தினர் மூலம் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். தற்போது மேலும் கூடுதல் மழை பெய்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமான வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இளம் பயிராக இருப்பதால் அவைகளால் பெரும் தண்ணீரை எதிர்கொள்ள முடியாது. இதனால் பயிர் பாதிப்பு அதிகம் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூடுதல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தண்ணீரை வடித்தல் உள்ளிட்ட மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்துள்ளது. மேலும் கனமழை இருப்பதாக கூறப்படுவதால் மழைநீர் சூழும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளும் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார். அதுசமயம் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget