மேலும் அறிய

திருவாரூரில் ரயில்வே பாலத்தில் புகுந்த ஆற்றுநீர்; 10 கிராம போக்குவரத்து துண்டிப்பு!

ரெயில் தண்டவாள பாதையில் தற்காலிகமாக மண்ணை கொட்டி வழிபாதையாக பயன்படுத்தி வருகிறோம் என்கிறார்கள் கிராம மக்கள்.

திருவாரூரில் ரயில்வே கீழ் பாலத்தில் ஆற்றுநீர் உட்புகுந்தது 10 கிராமத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதி.
 
திருவாரூர் அருகே கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற எந்த தேவையாக இருந்தாலும் திருவாரூருக்கு தான்  வர வேண்டும். இந்த பாதையில் இயக்கப்பட்டு வந்த பேருந்து பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைகளுக்கு திருவாரூர் வருவதற்கு கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த பாதையில் காட்டாற்று பாலம் அருகில் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி செல்லும் ரெயில்வே பாதையை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றிடும் வகையில் காட்டாற்று கரையில் சிமெண்ட் கான்கீரிட் தடுப்பு அமைத்து கீழ்பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் கரையில் கீழ்பாலம் கட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவாரூரில் ரயில்வே பாலத்தில் புகுந்த ஆற்றுநீர்; 10 கிராம போக்குவரத்து துண்டிப்பு!
இருந்தபோதிலும் ரெயில்வே கீழ்பாலத்தை ரெயில்வே நிர்வாகம் 2.5 கேடி மதிப்பில் அமைத்து ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றியது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு காட்டாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இடும்பு உயரம் தண்ணீர் இருந்ததால் நடந்து செல்ல முடியாமலும், வாகனமும் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த பாதையில் போக்குவரத்து துண்டிப்பானது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காட்டாறு என்பது வடிகால் ஆறாக உள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் காட்டாற்றில் அதிக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் செல்லும் போது உடைப்பு ஏற்பட்டு இப்பகுதியில் வயல்கள் நீரில் முழ்கும். இந்த சுழ்நிலையில் ஆற்றின் கரையில் ரெயில்வே கீழ்பாலம் கட்டுவதால் தண்ணீர் புகுந்து ஆபத்தான நிலை ஏற்படும், மாற்று பாதை அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி மனு அளித்தும் பயனில்லை.

திருவாரூரில் ரயில்வே பாலத்தில் புகுந்த ஆற்றுநீர்; 10 கிராம போக்குவரத்து துண்டிப்பு!
இந்நிலையில் காட்டாற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட சில நாட்கள் ஆன நிலையில் ரெயில்வே கீழ்பாலத்தில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சுமார் 3 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாதையில் யாரும் கடந்து செல்ல முடியாத நிலையில் பாதை துண்டிப்பானது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரெயில் தண்டவாள பாதையில் தற்காலிகமாக மண்ணை கொட்டி வழிபாதையாக பயன்படுத்தி வருகிறோம். பாதுகாப்பற்ற பாதையில் மோட்டார் சைக்கிளில் மட்டுமே தள்ளி கொண்டு செல்ல முடியும். வேறு எந்த வாகன போக்குவரத்து செல்ல முடியாது. இதனால் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை உள்ளது. எனவே ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்கு பதிலாக மாற்று பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு: தஞ்சாவூரை GCC  நிறுவனங்களின் புதிய மையமாக மாற்றும் ஹாம்லி நிறுவனம்
10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு: தஞ்சாவூரை GCC  நிறுவனங்களின் புதிய மையமாக மாற்றும் ஹாம்லி நிறுவனம்
ஏமாந்திடாதீங்க... என் பெயரில் போலி செல்போன் அழைப்புகள்: தஞ்சை ஆட்சியர் ரேவதி எச்சரிக்கை
ஏமாந்திடாதீங்க... என் பெயரில் போலி செல்போன் அழைப்புகள்: தஞ்சை ஆட்சியர் ரேவதி எச்சரிக்கை
எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை
எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
Embed widget