மேலும் அறிய

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் குற்றச்சாட்டு

மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம், துணை முதல்வர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் சிகிச்சையில் இருந்த இளம்பெண் உயிரிழந்தார். அதன் காரணமாக உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 


அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் குற்றச்சாட்டு

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூரை சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவரது மகள் பர்வீன் பானு (23) என்பவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த பரக்கத்துல்லா  என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் பர்வீன் பானு தனது முதல் பிரசவத்திற்காக தேவர்கண்டநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு  வந்திருந்தார். கடந்த 7 ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பர்வீன் பானுவுக்கு 11ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தநிலையில் பர்வீன் பானு  தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். இன்று காலை 7 மணி அளவில் பர்வீன் பானு தனக்கு மயக்கம் வருவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த செவிலியரிடம் இது குறித்து கூறி உள்ளனர். அதற்கு செவிலியர் மருத்துவர் இன்னும் வரவில்லை வந்தவுடன் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பர் அதுவரை பொறுத்திருக்கவும் என்று கூறியுள்ளனர். செய்வதறியாது திகைத்த உறவினர்கள் அருகில் உள்ள அறையில் இருந்த மற்றொரு செவிலியரிடம் இது குறித்து கூறி உள்ளனர். அந்த செவிலியர் அருகில் உள்ள செவிலியர் தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே பர்வீன் பானு தனது படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கோபமுற்ற உறவினர்கள் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் குற்றச்சாட்டு

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதால் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து திருவாரூர்  டிஎஸ்பி சிவராமன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் உறவினர்கள் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்துள்ளனர். 

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆன பர்வீன் பானு என்கிற பெண் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் யாரும் அப்போது பணியில் இல்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் விளக்கமளிக்கையில், உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மயக்கம் ஏற்படும்போது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியில் இருந்த மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மேலும் இது குறித்து மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” நீட் போராட்டத்தை தாக்கிப்பேசிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” நீட் போராட்டத்தை தாக்கிப்பேசிய அண்ணாமலை
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” நீட் போராட்டத்தை தாக்கிப்பேசிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” நீட் போராட்டத்தை தாக்கிப்பேசிய அண்ணாமலை
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
100 crore movies : இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?
இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Embed widget