மேலும் அறிய

Thiruvarur: குடவாசல் அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணியை தொடங்க விடாமல் விவசாயிகள் எதிர்ப்பு

கொள்முதல் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்படுவதால் பள்ளி குழந்தைகளுக்கும்  அச்சுறுத்தலாக அமையும்

குறுகலான சாலை மற்றும் அருகாமையில் பள்ளி உள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைய உள்ள இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம்  குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கீழ் தெருவில் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் தற்காலிக இடத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. திரியம்பகாபுரம்,மருதமாணிக்கம், சர்வமானியம், எலந்தவனஞ்சேரி, கோவில்பத்து, பெரும்பண்ணையூர் கிராமங்களை சேர்ந்த 1000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் நெல்லை  இந்த கொள்முதல் நிலையத்தின் வாயிலாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.


Thiruvarur: குடவாசல் அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணியை தொடங்க விடாமல் விவசாயிகள் எதிர்ப்பு

இந்த நிலையில் இதற்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என்கிற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் கோவில் பத்து கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் தேர்வு செய்து கட்டுமான பணியும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கோவில் பத்து கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கக்கூடாது எனவும் நெல் கொள்முதல் நிலையம் இருக்கின்ற பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளதால் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வந்து செல்லும் லாரிகளால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், கொள்முதல் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்படுவதால் பள்ளி குழந்தைகளுக்கும்  அச்சுறுத்தலாக அமையும் என்றும் மேலும் தற்போது அரசு தேர்வு செய்துள்ள இடத்தில் 200 ஆண்டுகால பழமையான அரசமரம் இருப்பதாகும் அதையும் அரசு வெட்ட முயற்சிப்பதாகவும் கூறி விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நெடுஞ்சேரி சாலையில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெல் கொள்முதல் நிலையம் கட்டித் தர வேண்டும் என்றும் கூறி தற்போதைய நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணியை தொடங்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Thiruvarur: குடவாசல் அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணியை தொடங்க விடாமல் விவசாயிகள் எதிர்ப்பு

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜனிடம் கேட்டபோது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தான் நெல் கொள்முதல் நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு புறம்போக்கு நிலத்தில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் கட்ட முடியும், விவசாயிகளுக்கான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் கட்ட முடியாது என்றும் மேலும் தற்போது விவசாயிகள் அளிக்கின்ற இடமானது இடத்திற்கு அருகில் நீர்நிலை அமைந்துள்ளதால் அந்த இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் உறுதித் தன்மை பாழ்படும் என்பதால் விவசாயிகள் மாற்று இடமாக அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து கொடுத்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விவசாயிகள் கூறும்போது, நாங்கள் தேர்வு செய்து கொடுத்த இடத்தில் இடம் பள்ளமாக இருப்பதாகவும் அதில் மண் கொட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால் மண் கொட்டி மேடுப்படுத்தி கொடுத்தும் கூட அதில் கொள்முதல் நிலையம் கட்ட அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் விவசாயிகள் இடையே நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதால் கட்டுமான பணி தாமதம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
Embed widget