மேலும் அறிய

திருத்துறைப்பூண்டியில் நலிவடைந்து வரும் அரசு கால்நடை பண்ணை - விவசாயிகள் வைத்த கோரிக்கை

நலிவடைந்து வரும் திருத்துறைபூண்டியில் உள்ள அரசு கால்நடை பண்ணையை மேன்படுத்துமா தமிழக அரசு?

இந்தியாவின் பிரதான தொழில் விவசாயம். விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருப்பது கால்நடைகள். கால்நடைகளில் முக்கியதுவம் வாய்ந்தது மாடுகள். மாடுகளில் பல வகை உண்டு இந்த பல வகையில் சிலவற்றை மட்டும் தான் மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 36 வகை நாட்டு இன மாடுகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம்  வழங்கியுள்ளது. இதே போன்று தமிழகத்தில் 16 வகையான நாட்டு இன மாடுகளுக்கு மட்டும் அங்கீகாரம் உள்ளது. இந்த 16 வகையில் ஒரு வகை மாடுதான் உம்பளச்சேரி மாடுகள். நாகை மாவட்டத்தில் உள்ள உம்பளச்சேரி கிராமம் தான் இதற்கு பூர்வீகம். சாதாரண மாடுகளை விட பன் மடங்கு பலசாலியான உம்பளசேரி மாடுகள் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது. இந்த வகை மாடுகளை பராமரிப்பதற்கு என்று கால் நடைத்துறையால் 1968ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை கிராமத்தில் 496 ஏக்கரில் பண்ணை உருவாக்கப்பட்டது. அன்று முதல் உம்பளச்சேரி மாடுகளை பராமரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்தும் உற்பத்தி செய்யும் பால் விற்பனையும் செய்யப்படுகிறது.


திருத்துறைப்பூண்டியில் நலிவடைந்து வரும் அரசு கால்நடை பண்ணை - விவசாயிகள் வைத்த கோரிக்கை

இந்த கால்நடை குடிநீருக்காக 12 குளங்கள் உள்ளது. பிரத்தேகமாக பல ஏக்கரில் புல் வளர்க்கப்பட்டு தீவனமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உலர்ந்த வைக்கோலும் தீவனமாக கொடுக்கப்படுகிறது. சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட மாடுகள் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 400க்கும் குறைவான மாடுகளே உள்ளன. காரணம் இம்மாடுகளை பராமரிக்க போதுமான பணியாளர்கள் இல்லாதாதால் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்பினால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். மாடுகள் குறைந்ததற்கு காரணம் இது மட்டுமல்ல என்றும் குளங்களில் தண்ணிர் இல்லாததாலும் போதிய உலர்ந்த வைக்கோல் வைக்கப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே குளங்கள் அனைத்தையும் தூர்வாரி உரிய நேரத்தில் தீவனம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.


திருத்துறைப்பூண்டியில் நலிவடைந்து வரும் அரசு கால்நடை பண்ணை - விவசாயிகள் வைத்த கோரிக்கை

இவை அனைத்திற்கும் மேலாக உம்பளச்சேரி மாடுகளுக்கு என்று அங்க அடையாளங்கள் பாரம்பரியம் உண்டு. ஆனால் தற்போது அந்த பாரம்பரியம் மறையும் வகையில் அங்க அடையாளம் இன்றி உம்பளச்சேரி மாடுகள் காணப்படுகின்றன. அந்த பாரம்பரியத்தை காக்கும் வகையில் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்பண்ணையில் வேளாண்துறை மாதிரி பண்ணை ஒன்று அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கால்நடை துறை துணை இயக்குனரிடம் கேட்டத்திற்கு,  “கொற்கை கால்நடை பண்ணை குளங்கள் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஊழியர்கள் பற்றாக்குறையை அரசிடம் தெரிவித்து உற்ற நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண்துறை மாதிரி பண்ணை ஒன்று அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை குறித்தும் அரசிடம் தெரிவித்து உற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
TVK Election Manifesto: ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
TVK Election Manifesto: ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
Lunar Eclipse: 2026-ல் 4 சந்திர கிரகணங்களா.?! முதல் கிரகணம் எப்போது தெரியுமா.? இந்தியாவில் காண முடியுமா.?
2026-ல் 4 சந்திர கிரகணங்களா.?! முதல் கிரகணம் எப்போது தெரியுமா.? இந்தியாவில் காண முடியுமா.?
Gold Loan Waiver: நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.! அரசு எடுத்த முக்கிய முடிவு.? வெளியாக போகும் குஷியான அறிவிப்பு
நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.! அரசு எடுத்த முக்கிய முடிவு.? வெளியாக போகும் குஷியான அறிவிப்பு
Kia Seltos Vs Hyundai Creta: கியா செல்டோஸா.? ஹூண்டாய் க்ரெட்டாவா.? அதிக அம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட் எது.?
கியா செல்டோஸா.? ஹூண்டாய் க்ரெட்டாவா.? அதிக அம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட் எது.?
Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Embed widget