மேலும் அறிய

திருவாரூர்: உதயமார்தாண்டபுரம் கிளை நூலக கட்டிடம் சேதம்; மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகும் அவலம்

இங்கு வரும் வாசகர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிகையும் படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிளை நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்தில் பழமையான அறிய புத்தகங்கள் முதல் பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் என சுமார் 20,000 புத்தகங்கள் இங்கு உள்ளன. இதில் சுற்றுபகுதியை சேர்ந்த 2135 வாசகர்கள் உறுப்பினராக உள்ளனர். 66 பேர் புரவலராக உள்ளனர் தினந்தோறும் 40 முதல் 50 பேர் குறையாமல் வந்து செல்கிறனர். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் அதிகளவில்  இங்கு வந்து செல்வதுதுண்டு. நூலகம் துவங்கும் போது சாதாரண ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நூலகம் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கடந்த 2007-2008ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வந்த நிலையில் போதிய தரத்துடன் கட்டப்படாததால் பழுதடைந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு 2014-2015ம் ஆண்டு ஆர்.பி.எம்.ஆர் திட்டத்தின்படி ரூபாய் 66500 செலவில் கட்டிடம் பழுதுநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பணியும் முறையாக நடைபெறாததால் அடுத்த சில மாதங்களில் மீண்டு கட்டிடத்தின் சிலாப் சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கம்பிகள் தெரிகிறது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் சிலாப் வழியிலும் சேதமான சுவர்கள் வழியிலும் கசிந்து நூலகத்திற்குள் சொட்டுகிறது. இதனால் புத்தங்கள் வீணாகி வருகிறது.


திருவாரூர்: உதயமார்தாண்டபுரம் கிளை நூலக கட்டிடம் சேதம்; மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகும் அவலம்

இதன் மூலம் அறிய புத்தங்களை, பயனுள்ள புத்தகங்கள் வீணாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் புத்தங்கங்கள்  வாசகர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நேரத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டதால் அப்போதைக்கு இடம் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது அதிகளவில் புத்தகங்கள் எண்ணிக்கையும் அதிகரித்தால் அதேபோல் வாசகர்கள் வரத்தும் அதிகளவில் வந்து செல்வதால் தற்போது இந்த நூலக கட்டிடம் போதுமானதாக இல்லை. இதனால் வாசகர்கள் உக்கார்ந்து படிக்கவும் மிகவும் சிரமம்மாக உள்ளது. இதனால் இங்கு வரும் வாசகர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிகையும் படிபடியாக குறைய வாய்ப்புகள் உள்ளது.  இந்தநிலையில் இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு இந்த நூலக கட்டிடத்தில் மழைநீர் கசிந்து உள்ள சொட்டியது இதனை பார்த்த நூலக அலுவலர் புத்தங்களை நனையாமல் இருக்க பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் சாக்கு பைகள் போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் இங்குள்ள அனைத்து புத்தகங்களும் மழைநீரில் நனைந்து வீணாகி விடும். அதனால் இந்த கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அப்போதைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் கண்டுக்கொள்ளவில்லை.  எனவே இந்த 20ஆயிரம் புத்தகங்களையும் பாதுக்காக்கும் வகையிலும் வாசகர்கள் வந்து உக்கார்ந்து பொறுமையாக படிக்கும் வசதியை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு அப்பகுதியில் அதிகளவில் வாசகர்கள் அமரும் வகையில் கூடுதல் புத்தகங்களை வைக்கும் வகையில் போதுமான அளவு கட்டிடத்தை உடன் கட்டித்தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. 



திருவாரூர்: உதயமார்தாண்டபுரம் கிளை நூலக கட்டிடம் சேதம்; மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகும் அவலம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நூலக வாசகர்கள் கூறுகையில்: உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் இந்த கிளை நூலகத்தில் சுமார் 20,000 புத்தகங்கள் இருக்கின்றன. இங்கு அதிகளவில் வாசகர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் வந்து  பயன் பெற்று வருகின்றனர். ஆனால் இந்த சூழ்நிலையில் நூலக கட்டடம் சுமார் 20வருடங்களுக்கு முன்பு  கட்டப்பட்டது. இப்போது மிகவும் மோசமான முறையில் பழுதடைந்த உள்ளது. இந்த சூழ்நிலையில் மழைக்காலத்தில் கட்டத்தில் மழைநீர் கசிவினால் புத்தகங்கள் நனைந்து விடுகிறது. அதுமட்டும் இல்லாமல் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதுமான வசதிகள் இல்லை கேட்பாரற்று கிடக்கிறது நாங்கள் தேடும் புத்தங்களை ஈசியாக எடுக்க முடியவில்லை. இதனால் இங்கு வர ஆர்வம் குறைந்து விடுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அதிகளவில் வாசகர்கள் அமரும் வகையிலும் அதிகளவில் புத்தங்களை வைக்கும் வகையிலும் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Embed widget