மேலும் அறிய

முத்துப்பேட்டையில் மக்களின் அலட்சியத்தால் தினமும் பலியாகும் கால்நடைகள்

முத்துப்பேட்டையில் பொதுமக்களின் அலச்சியத்தால் தினமும் பலியாகும் ஆடுகள் மற்றும் கால்நடைகள். ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழித்தடத்தில் உள்ள ரயில் பாதை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவானது. இவ்வழியாக உள்ள திருவாரூரிலிருந்து முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதால் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதால் துரிதப்படுத்தப்பட்டு 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டெமு ரயில் சேவையாக தொடங்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையின் காரணமாக மீண்டும் திருவாரூர் காரைக்குடி அகல ரயில்பாதை தடத்தில் சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் காரைக்குடி பாசஞ்சர் ரயில் காலையும் மாலையும் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் மறுநாள் ராமேஸ்வரத்திலிருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. 


முத்துப்பேட்டையில் மக்களின் அலட்சியத்தால் தினமும் பலியாகும் கால்நடைகள்

இந்தநிலையில் முத்துப்பேட்டை எல்லைக்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் கால்நடைகள் அடிக்கடி ரயில் மோதி பலியாகி வருகிறது. குறிப்பாக முத்துப்பேட்டை நகரை ஓட்டியுள்ள உப்பூர் முதல் தம்பிக்கோட்டை வரையிலான ரயில்வே தடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆடு அல்லது மாடுகள் ரயிலில் அடிபட்டு பலியாகிவிடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுவதுடன் இதன் மூலம் ரயில் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் மனித உயிர் பலிகளும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. சில தினங்களுக்கு முன்புகூட ஆலங்காடு பகுதியில் பாசஞ்சர் ரயில் மோதி ஒரு மாடும், கொய்யா தோப்பு பகுதியில் செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 மாடும் பலியாகியது. அதேபோல் கடந்த 12ந்தேதி அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் குடும்ப மன உளைச்சல் காரணமாக திருவாரூர் பாசஞ்சர் ரயில் முன்பு குதித்த போது அங்கு நின்றவர்கள் காப்பற்றினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக  வாரம் ஒருமுறை வந்து செல்லும் செகந்திராபாத்  ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகளவில் கால்நடைகள் பலியாகி வருகிறது. இதில் முத்துப்பேட்டை ரயில் நிலையமும் ரயில் கேட்டும் சுமார் 100அடிதூரத்தில் உள்ளது கேட் கீப்பர் தங்கி இருக்கும் கட்டிடம் சுமார் 60அடி தூரத்தில் உள்ளது இந்த இடைப்பட்ட இடத்தில் அடிக்கடி கால்நடைகள் ரயில் அடிபட்டு பலியாகி வருகிறது. 


முத்துப்பேட்டையில் மக்களின் அலட்சியத்தால் தினமும் பலியாகும் கால்நடைகள்

இதில் இப்பகுதி தண்டவாளத்தில் ஆடு படுத்திருந்ததை பார்த்தும் அவர் விரட்டுவதில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இனிவரும் காலத்தில் இவர் கண்காணிக்க வேண்டும் அதேபோல் இவ்வழி தடத்தில் கால்நடைகள் பலியாகாமல் இருக்கும் வகையில் ரயில்வே நிர்வாகமும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் சம்பந்தப்பட்ட கால் நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக இதே போன்று கால்நடைகள் அதிகளவில் ரயில்வே தண்டவாளங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தண்டவாளப் பகுதிகளில் நாள்தோறும் அதிகளவில் விபத்துக்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும் காவல்துறையினரும் சாலையில் கால்நடைகள் அதிகளவில் நடமாடினால் கால்நடையின் உரிமையாளருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்று கால்நடைகள் உயிரிழப்பு சம்பவங்கள் என்பது தவிர்க்கப்படும். அது மட்டும் இல்லாமல் பெரிய அளவில் விபத்துக்கள் இல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Embed widget