மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை; சாலைகளில் வெள்ளம்!

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நன்னிலம், ஆண்டிபந்தல், பூந்தோட்டம், கொரடாச்சேரி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

திருவாரூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை. விவசாயிகள் கவலை.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நாளை நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை; சாலைகளில் வெள்ளம்!
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் சாத்தனூர் அணை, இளையான்குடியில் தலா ஆறு சென்டிமீட்டரும், ஒகேனக்கல் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதன் காரணமாக இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
 
இந்நிலையில் இன்று மதியம் முதல் திருவாரூர் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்த நிலையில், இன்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நன்னிலம், ஆண்டிபந்தல், பூந்தோட்டம், கொரடாச்சேரி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை; சாலைகளில் வெள்ளம்!
மேலும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து சில தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மிகுந்த பாதிப்பு அடையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தற்பொழுது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விதை தெளித்து இருக்கும் நிலையில், தற்பொழுது பெய்த மழை சம்பா பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் விவசாயிகள் கவலையும் மகிழ்ச்சியும் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget