மேலும் அறிய

அடித்து வேலை வாங்குவதாக மலேசியாவில் இருந்து கதறும் வாலிபர் - கண்ணீருடன் கணவரை மீட்க உதவி கேட்கும் மனைவி

தனது கணவரை அதிக சம்பளம் தங்குமிடம் உணவு இலவசம் என்று அழைத்துச் சென்றுவிட்டு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அவரை சுமை தூக்குவது போன்ற கடுமையான வேலைக்கு ஈடுபடுத்தி வருகின்றனர்.

சொன்னது ஒரு வேலை, கொடுப்பது ஒரு வேலை, அடித்து வேலை வாங்குவதாக மலேசியாவில் இருந்து குரல் பதிவு அனுப்பிய வாலிபர். கணவரை மீட்டு தர வேண்டுமென கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் மனு அளித்தார்.
 
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசி வயது 40. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது. இவர் திருவாரூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தியாகராஜன் என்பவர் மூலம் மலேசியாவிற்கு  சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் வேலைக்காக சென்றுள்ளார். மேலும் அங்கு அவருக்கு மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் என்றும் தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று தியாகராஜன் கூறப்படுகிறது.

அடித்து வேலை வாங்குவதாக மலேசியாவில் இருந்து கதறும் வாலிபர் - கண்ணீருடன் கணவரை மீட்க  உதவி கேட்கும் மனைவி
 
இந்த நிலையில் அங்கு அவருக்கு 27 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகவும் மேலும் உணவு தங்கும் இடம் போன்றவற்றுக்கு தாங்களே செலவு செய்து கொள்ள வேண்டும் என்றும் விசாவிற்காக மாதம் 6500 ரூபாய் பணம் பிடித்துக் கொள்ளப்படும் என்று கூறுவதாகவும் ஏற்கனவே கழுத்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ள தன்னால் மூன்றாவது மாடி வரை சுமை தூக்கி செல்ல முடியவில்லை என்றும் தன்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்று மாறும் வேலைக்கு வரவில்லை என்றால் முதலாளி அடிப்பதாகவும் தனது நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து துளசியின் மனைவி வித்தியா தனது 4 வயது ஆண் குழந்தை மற்றும் எட்டு மாத பெண் குழந்தையுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், தனது கணவரை அதிக சம்பளம் தங்குமிடம் உணவு இலவசம் என்று அழைத்துச் சென்றுவிட்டு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அவரை சுமை தூக்குவது போன்ற கடுமையான வேலைக்கு ஈடுபடுத்தி வருவதாகவும் எனவே அங்கிருந்து அவரை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget