மேலும் அறிய

திருவாரூரில் இன்று ஒரே நாளில் 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு...!

மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தற்போது வரை 633 மையங்களில் 11 ஆயிரம் நபர்கள் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடி கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 7 மணி முதல் 633 மையங்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

திருவாரூரில் இன்று ஒரே நாளில் 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு...!
 
“கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள அவசியம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை அனைத்து மக்களிடம் எடுத்துசென்று அதன் மூலம் முழுமையான பயனை மக்களிடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக எடுத்துக்கூறி செயலாற்றி வருகிறார் இன்று திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் 63,200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 7 மணி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் இதுநாள்வரை தடுப்பூசி எடுத்துகொள்ளதவர்கள், உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி எடுத்துகொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதனை கருத்தில்கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூரில் இன்று ஒரே நாளில் 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு...!
திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தற்போது வரை 633 மையங்களில் 11 ஆயிரம் நபர்கள் இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் திருவாரூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட முதலியார் தெருவில் உள்ள அரசு பள்ளி, மூலங்குடி அரசு பள்ளி, ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 5 லட்சத்து 52 ஆயிரத்து 775 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 
400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 
வரும் ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கணும்... எதற்கு? எங்கு வேலை வாய்ப்பு என்று தெரியுங்களா?
வரும் ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கணும்... எதற்கு? எங்கு வேலை வாய்ப்பு என்று தெரியுங்களா?
நெல் சாகுபடிக்கு மாற்றாக மலர் விவசாயம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் செண்டிப்பூக்கள் 
நெல் சாகுபடிக்கு மாற்றாக மலர் விவசாயம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் செண்டிப்பூக்கள் 
சாலையா? புதர்க்காடா? பூதலூர் - தஞ்சாவூர் பாதையில் உயிரைக் கையில் பிடித்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள்!
சாலையா? புதர்க்காடா? பூதலூர் - தஞ்சாவூர் பாதையில் உயிரைக் கையில் பிடித்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Embed widget