மேலும் அறிய

வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார்....ஃபேஸ்புக்கில் லைவ்...அடித்த அலாரம்...!

வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியை காண்பித்து வங்கி ஊழியர்களை சுட்டு விடுவேன் என மிரட்டிய சாமியார். பரபரப்பை ஏற்படுத்திய முகநூல் நேரலை.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு அனுஷா என்கிற மனைவியும் காவியா, கவிதா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் இந்த பகுதியில் குடவாசல் சாமிகள் என்றும் திருமலை சாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊரில் தங்கி வசித்து வருகிறார்.
திருமலை சாமிகள் வெளிநாட்டில் இருக்கும் பொழுது உள்ளூரில் மினரல் வாட்டர் நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ளார். அதை சரிவர கவனிக்க ஆள் இல்லாத காரணத்தினால் அந்த தொழிலை கைவிட்டு உள்ளார். அதேபோன்று கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமலை சாமிகளின் மனைவி அனுசுயா சுயேட்ச்சையாக நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார்....ஃபேஸ்புக்கில் லைவ்...அடித்த அலாரம்...!

திருமலை சாமிகள் குடவாசல் அருகில் உள்ள மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அதேபோன்று அவரது மகள் காவியாவிற்கும் அந்த கிளையில் வங்கி கணக்கு உள்ளது. திருமலைசாமி மூத்த மகள் காவியா சீனாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது மகள் காவியாவிற்கு மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் கல்வி கடன் கேட்டு கடந்த வாரம் விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் ஜாமின் இருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்க முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த திருமலை சாமிகள் தனது ஜிப்பில் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் அங்குள்ள அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியும் உள்ளார். இதனை அவருடன் வந்தவர்கள் அவரது முகநூல் நேரலையில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இந்த முகநூல் நேரலை என்பது அரை மணி நேரம் வரை தொடர்ந்தது. மேலும் திருமலை சாமிகள் அந்த வங்கி கிளைக்குள் நாற்காலியில் அமர்ந்து புகை பிடிக்கிறார் வங்கிகளுக்குள் புகை பிடிப்பதால் அங்குள்ள அவசரகால அலாரம் ஒலிக்கின்றது இவை அனைத்தும் அந்த நேரலையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார்....ஃபேஸ்புக்கில் லைவ்...அடித்த அலாரம்...!

இதுகுறித்த செய்தி  ஊடகங்களில் வெளியானதை அடுத்து நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இலக்கியா தலைமையில் குடவாசல் காவல் துறையினர் சிட்டி யூனியன் வங்கி கிளைக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் வங்கி கிளையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து உள்ளனர். மேலும் காவல்துறையினர் வங்கிக்குள் வந்ததும் திருமலை சாமியார் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து, சாமியார் திருமலையை கைது செய்வதற்காக காவல்துறையினர் அவர் வீட்டிற்கு சென்ற பொழுது அங்கே காவல் துறையினருடன் சாமியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல் துறையினரால் கைது செய்து குடவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் வங்கி அதிகாரிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கினையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget