மேலும் அறிய

திருவாரூரில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24,293 பேர் - இதுவரை 7,57,263 பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 4ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி மாபெரும் முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் 4 ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது மாபெரும் கொரோனா தடுப்பு முகாமில் 400 முகாம்களில் 24,293 நபர்கள் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24,293 பேர் - இதுவரை 7,57,263 பேருக்கு தடுப்பூசி
தமிழ்நாடு அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி ரவருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள், மற்றும் பத்திரிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டால் பொதுமக்கள் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை உதவியாக இந்த தடுப்பூசி அமையும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் நேரடியாக சென்று அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி என்பது செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

திருவாரூரில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24,293 பேர் - இதுவரை 7,57,263 பேருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது மாபெரும் தடுப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நேற்று ஒரே நாளில் 24,293  நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி  செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை என ஒட்டுமொத்தமாக 7,57,263 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம், அதேபோன்று மாங்குடி அரசு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் என பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் அனைவருக்கும் முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மற்றும் திருவாரூர் வட்டாட்சியர் தனசேகரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Venezuela Russia America: வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Venezuela Russia America: வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
Gold Storage At Home: பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
iPhone 17 Pro Max Discount: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்குற ஐடியால இருக்கீங்களா.? ரூ.18,000 வரை சேமிக்க வழிகள் இதோ..
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்குற ஐடியால இருக்கீங்களா.? ரூ.18,000 வரை சேமிக்க வழிகள் இதோ..
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Embed widget