மேலும் அறிய

குடும்ப கஷ்டம்.. ரூ.1,10000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை.. பெண்ணுக்கு குவியும் பாராட்டு

உரியவரிடம் ரூ. 1,10000 த்தை ஒப்படைத்தும், கஷ்டத்திலும் நேர்மையாக நடந்து கொண்ட உறவினர் மதியழகன், தனலெட்சுமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சன்மானம் வழங்கியும், வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.

குடும்ப கஷ்டத்திலும் நேர்மையாக கீழே கிடந்த ரூ.1,10000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்

எஸ்பி பாராட்டு

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள விஎன்எஸ்  மார்கெட்டில் செயல்பட்டு வரும் செல்வம் அரசி மண்டி உரிமையாளர் திருச்செல்வம் என்பவர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள தனியார் ஐசிஐசிஐ  வங்கியில் ரூ. 7,60000 பணத்தை வங்கியில் கட்ட சென்றுள்ளார், அதில் ரூ. 1,10000 த்தை தவற விட்டு விட்டார்.

இது தொடர்பா கடந்த 1.3.22 ம் தேதி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரையடுத்து, பட்டுக்கோட்டைதுணைக்காவல் கண்காணிப்பாளர்  செங்கமலக்கண்ணன், கடந்த 5.3.22 ம் தேதி பணத்தை காணாமல் போனது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து, பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் பாஸ்கர்  தலைமமையில் தனி படை அமைத்து, விசாரணை தொடங்கியது.

பின்னர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது,  கீழே கிடந்த பணத்தை அவ்வழியாக குழந்தையுடன் சென்ற பெண் கையில் எடுத்து பணம் யாருடையது என்பது கேட்டது  தெரிய வந்தாகவும்,பணம் எடுத்தது சம்மந்தமாக பக்கத்தில் இருந்தவர்களிடம் அருகில் உள்ள கடைக்கு உணவருந்த செல்கிறோம் யாரும் வந்து பணம் சம்மந்தமாக கேட்டால் சொல்லுங்கள் என்று தெரிவித்து சென்று விட்டார். விசாரணையில் பணத்தை எடுத்து சென்றது வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்திற்குட்ப்பட்ட இடையாத்தியை சேர்ந்த மதியழகன் மற்றும் தனலெட்சுமி என தெரியவந்தது.


குடும்ப கஷ்டம்.. ரூ.1,10000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை.. பெண்ணுக்கு குவியும் பாராட்டு

தனலெட்சுமியின் நேர்மையை தஞ்சை எஸ்பியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியாகாந்தபுனேனி அவர்களை சந்தித்து உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,  பணத்ததிற்கு சொந்தமானவர்  திருச்செல்வம் மற்றும் தனலெட்சுமி, உறவினர் மதியழகன் ஆகியோரை நேரில் அழைத்து உரியவரிடம் ரூ. 1,10000 த்தை ஒப்படைத்தும், குடும்ப கஷ்டத்திலும் நேர்மையாக நடந்து கொண்ட உறவினர் மதியழகன், தனலெட்சுமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சன்மானம் வழங்கியும், இரு கைகளையும் கூப்பி  வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.


குடும்ப கஷ்டம்.. ரூ.1,10000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை.. பெண்ணுக்கு குவியும் பாராட்டு

இது குறித்து தனலெட்சுமி கூறுகையில்,எனது கணவர் விவேக் கூலித்தொழிலாளி .தஷிதா(3), 6 மாத குழந்தையான ஜோவிதா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. விவேக் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு விவேக்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மூன்று மாதங்கள் தனிமைப்படுப்பட்டார். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த விவேக்கிற்கு, இதுவரை சம்பளம் சரி வரவழங்கவில்லை. இதனால் குடும்பத்திற்கு தேவையான பணம் அனுப்பமுடியாததால், மிகவும் கஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து என தந்தையார் எங்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்து வருகிறார்.


குடும்ப கஷ்டம்.. ரூ.1,10000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை.. பெண்ணுக்கு குவியும் பாராட்டு

இந்நிலையில் தஷிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அழைத்து சென்றோம். என்னுடன் தாய் மற்றும் சகோதர் ஆகிய இருவரும் வந்தனர். சாப்பிடுவதற்காக சாலையை கடக்கும் போது, பணக்கட்டு கிடந்தது. இதனையடுத்து அங்குள்ள வியாபாரிகள்,கடைகாரர்களிடம் கேட்டு பார்த்தேன். ஆனால் யாரும் பதில் சொல்லாததால் தகவலை கூறி விட்டு, ஒட்டலுக்கு சாப்பிட சென்றோம். அப்போதுள்ள அங்குள்ள கடைகாரர்களிடம், பணத்தை தொலைத்தவர் வந்து கேட்டால், செல்போன் நம்பருக்கு அழைக்க சொல்லுங்கள் என்று நம்பரை கொடுத்து விட்டு வந்தேன்.   பின்னர், போலீசார் கூறியதின் பேரில், எஸ்பி மூலமாக பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தேன் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.