மேலும் அறிய

39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அச்சு இயந்திரம்

’’தமிழக முதல்வர் திறந்து வைத்தால், சிறப்பாக இருக்கும் என்பதற்காக, அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’

தஞ்சாவூர் தமி்ழ்ப் பல்கலைக் கழகத்திற்கு சொந்த உபயோகத்திறகாகக 39 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோடி மதிப்பீட்டில் புதியதாக ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரம், பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பிரத்தியோகமான கட்டிடத்தில் சிறப்பாக இயங்குவதறிந்த பல்கலைக் கழகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அச்சு இயந்திரம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் கடந்த 1981ஆம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் என்பவர் தமிழின் ஆராய்ச்சி நூல்கள், தொலைநிலைக் கல்விக்கான நூல்களையும், பல்கலைக் கழக பதிப்பு நூல்களையும் தாமே அச்சிட வேண்டும் என்ற குறிக்கோளோடு கடந்த 1982-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து ஒரு கோடி மதிப்பீட்டில் அச்சு இயந்திரத்தை வரவழைத்து தஞ்சாவூர் நகரப்குதியிலுள்ள அரண்மனை வளாகத்தில் நிறுவினார். ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் தமிழ் பல்கைக்கழக பதிப்புத்துறை சார்பில் தொடர்ந்து அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக் கழகம், திருச்சி சாலையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பரளவில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கு இயங்கி வருகிறது.


39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அச்சு இயந்திரம்

ஆனால் அரண்மனை வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்தால், அந்த இயந்திரம் மறுபடியும் செயல்படாத நிலைக்கு சென்றுவிடும் என தொழில் நுட்ப வல்லுனர்கள் தெரிவித்தனர். இதனால், ஒரு கோடி மதிப்பில் இறக்குபதி செய்யப்பட்ட இயந்திரத்தை தமிழ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய 12 துணைவேந்தர்களும் அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்யும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இந்நிலையில் தமிழ் பல்கலைக் கழகத்தில் பதிப்புத்துறை, விற்பனைத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடங்களில் நிரந்தர புத்தக விற்பனைக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிப்புத்துறைக்கு தேவையான அச்சு இயந்திரத்தை பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், இடமாற்றம் செய்வது என முடிவு செய்தார். இதனையடுத்து புதிய கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அச்சு இயந்திரம் 7 லட்சத்து 5 ஆயிரம் செலவில் டென்டர் கோரப்பட்டு அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சுஇயந்திரம் மீண்டும் பொருத்தினால் செயல்படாது என கூறி,யாரும் டெண்டர் எடுக்க முன்வராத நிலையில், தற்போது அந்த இயந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், ரூ. ஒரு கோடி வீணாகவில்லை என்பதையறிந்த, பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.


39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அச்சு இயந்திரம்

இதுகுறித்து பதிப்புத்துறை இயக்குநர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில்,

ஜெர்மன் நாட்டிலிருந்து 39 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டு பல்கலைக் கழக நூல்கள் அச்சிடப்பட்டு வந்தது. அரண்மனை வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்ய, யாரும் வராமல்,  பலரும் தயக்கம் காட்டியகால், அந்த திட்டம், கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போதுள்ள துணைவேந்தர், இந்த திட்டத்தில் துணிவுடன், முடிவெடுத்து செயல்பட்டதால் அச்சு இயந்திரத்தை புதிய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் அச்சிடப்படும் இந்த இயந்திரத்தின் இன்றைய விலை பல கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. இந்த அச்சு இயந்திரத்தில் தற்போது பல்கலைக் கழகத்தின் நூல்கள் அனைத்தும் அச்சிட தயாராக உள்ளோம். இந்த புதிய பதிப்புத்துறை கூடத்தையும், அச்சகத்தையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தால், சிறப்பாக இருக்கும் என்பதற்காக, அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார். 

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
Embed widget