மேலும் அறிய

எங்கள் கட்சி தொண்டர், நிர்வாகிகள் முடிவே எனது முடிவு: டிடிவி.தினகரன் உறுதி

அ.ம.மு.க.,வை தவிர்த்துவிட்டு, எந்தவொரு கூட்டணியும், ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை தான் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. நான் இதை அதீத நம்பிக்கையில் சொல்லவில்லை.

தஞ்சாவூர்: கடந்த எட்டு ஆண்டுகளாக பல பிரச்சினைகளை தாண்டி, என்னுடன் பயணிக்கும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வார்த்தைதான் எனக்கு முக்கியம். அவர்களின் முடிவுதான் என் முடிவு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார். 

தஞ்சாவூரில் நேற்று அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தலைமையிலான, கூட்டணி தொடர்பாக பிற கட்சிகள் பேசி வருகின்றன. டிசம்பர் 31ம் தேதிக்குள்ளாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என நினைத்தேன். இருப்பினும், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக, அ.ம.மு.க.,வின் முடிவு குறித்துத் தெரிய வரும். கடந்த எட்டு ஆண்டுகளாக பல பிரச்சினைகளைத் தாண்டி, என்னுடன் பயணிக்கும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வார்த்தைதான் எனக்கு முக்கியம்.

அ.ம.மு.க.,வை தவிர்த்துவிட்டு, எந்தவொரு கூட்டணியும், ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை தான் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. நான் இதை அதீத நம்பிக்கையில் சொல்லவில்லை. நான்கு முனைப்போட்டி வரும் பொழுது, அ.ம.மு.க., இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றியடையும். எதிரியை வீழ்த்துவதா, துரோகத்தை வீழ்த்துவதா என்பது முக்கியமல்ல.

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூ., கட்சியை எதிர்த்து காங்கிரஸ் அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் என்பது வேறு. அதனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலில் தேர்தலை பாதிக்காது என்றுதான் கூறுவார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கடவுள், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிரிக்கின்ற செயலில், அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ ஈடுபடக்கூடாது. அமைதிப் பூங்காவாக, திகழும் தமிழகத்தில், பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்த்து, சகோதர சகோதரிகளாக வாழும் மக்களிடையே யாரும் பிரிவினையை உருவாக்கிவிட,  கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.

எஸ் ஐ ஆர் தேவை இல்லை என்று கூறுவது தவறு. பீகாரில் நடந்தது குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம் விடுபட்டு உள்ளவர்கள் என சரியான முறையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது புதிது இல்லை. இது வழக்கமான ஒன்றுதான்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறேன்; ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 2017ம் ஆண்டு, தீர்க்கமாக யோசித்துத்தான் அ.ம.மு.க., உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம், ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் லட்சியங்களை பல நுாற்றாண்டுகளுக்கு கொண்டு செல்லும் இயக்கமாக செயல்படும்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டுமென்றால், அவரது தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ், ஓர் அணியாகத் திரண்டால்தான் வெற்றிபெற முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை. இந்தத் தேர்தலில், அனைவருக்கும் தமிழக மக்கள் உரிய பதிலைத் தருவார்கள். நாங்கள் இடம்பெறும் கூட்டணியை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அமமுக வெற்றிக் கூட்டணியில் இணையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Embed widget