மேலும் அறிய

தஞ்சையில் மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிக்கப்படும் - மேயர் சண். ராமநாதன்

இப்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அதிகபட்சமாக மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடும்.

தஞ்சாவூர் மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார். இதற்கு முன்பாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் தெற்கு வீதியில் பொலிவுறு நகரத் திட்டப் பணியை ஆய்வு செய்த அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கூறினர். இதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் விரைவுபடுத்தி வருகிறோம்.

இப்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அதிகபட்சமாக மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடும். தற்போது, நான்கு ராஜ வீதிகளில் ரூ. 20 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. முன்பு இந்த வடிகாலில் அனைத்துக் கட்டடங்களும் சாக்கடை நீர் செல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் இப்போது அகலமான சாலையாக உள்ளது. மன்னர்கள் காலத்தில் இருந்தது போன்று நான்கு ராஜ வீதிகளும் விரிவுபடுத்தப்பட்டு, மழை நீர் வடிகால் அமைப்பதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வரும்போது அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, நான்கு வீதிகளிலும் தரை வழியாக கண்ணாடி நாரிழையில் மின் இணைப்பைக் கொண்டு செல்வதற்காக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தேரோட்டம் நடைபெற்றாலும், மின் தடை செய்யாமல் தவிர்க்கலாம். இதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில 2 மாதத்திற்கு முன்பு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மண்டலக் குழுத் தலைவர் எஸ்.சி. மேத்தா, மாமன்ற உறுப்பினர் ஜெ.வி. கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தஞ்சாவூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ”பல பகுதிகளிலும் சாலைகள் மிகுந்த மோசமாகவே உள்ளது. மெயின் பகுதிகள் ஒருசில இடங்களில் போடப்பட்டு இருந்தாலும் பல்வேறு உள் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தெற்கு வீதி பகுதியில் மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவு நீர் வடிகால்கள் பெரிதாக கட்டப்பட்டாலும் உள் சந்துகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமான உள்ளன. இதனால் அங்கிருந்து வரும் கழிவுநீர் சரியான முறையில் வடிகாலில் விழாத நிலை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut 14.07.2026:
Thanjavur power cut 14.07.2026: "திங்கட்கிழமை சார்ஜிங் திருவிழாங்கோ...... செவ்வாய்க்கிழமை தஞ்சையில் கரண்ட் லீவ்!"
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget