மேலும் அறிய

சம்பளம் வழங்காததால் தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சம்பளம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம், இது போன்று கையூட்டு பெறும் அலுவலர்களை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும் 120 ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தஞ்சாவூர் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் இன்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இக் காத்திருப்பு போராட்டத்தில் இரண்டு பெண்கள் உள்பட 20 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், தஞ்சை கிராமப்பகுதிகளில் பணியாற்றிவரும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 400 பேரில், 120 ஆசிரியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்காமல் இருப்பதால், குடும்ப செலவுகளை நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு சென்று சம்பளம் கேட்டால், இன்னும் வரவில்லை. கோப்புகளை அனுப்பியுள்ளோம் என அலைகழிக்கின்றனர். சிலர் அலுவலகத்தில் உள்ளவர்கள் கேட்பதை கொடுத்து விட்டு, சம்பளத்தை பெற்று கொள்கிறார்கள். இது குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லாமல் உள்ளது. புகார் அளிப்பவர்களை வேண்டும் என பல்வேறு பணிகளை வழங்கி கஷ்டப்படுத்துகின்றனர்.


சம்பளம் வழங்காததால் தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

அதேபோல, உயர் படிப்பு முடித்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களுக்குரிய தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான ஊக்கத் தொகை கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அதற்கான கோப்புகளை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கையூட்டு எதிர்பார்த்து இதுவரை அரசுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனை கண்டித்தும், சம்பளம் வழங்க கோரியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம், இது போன்று கையூட்டு பெறும் அலுவலர்களை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்குள் மாலை 5.15 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பளம் வழங்காததால் தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் என்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு இதுவரை சம்பளம் வழங்கப்படாத ஆசிரியர்களுக்கு பிரச்சினை சரி செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில்  சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, உயர் படிப்பு முடித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு விரைவில் தனி முகாம் நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மாலை 8 மணியளவில் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
கஜேந்திரனை காத்த ஆதிமூலப்பெருமாள்... பக்தர்களையும் காக்கும் கபிஸ்தல நாயகர் 
கஜேந்திரனை காத்த ஆதிமூலப்பெருமாள்... பக்தர்களையும் காக்கும் கபிஸ்தல நாயகர் 
பித்ரு தோஷம் நீக்கும் புனிதத் தலம்... ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலின் அதிசயம்!
பித்ரு தோஷம் நீக்கும் புனிதத் தலம்... ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலின் அதிசயம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
Embed widget