மேலும் அறிய

சம்பளம் வழங்காததால் தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சம்பளம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம், இது போன்று கையூட்டு பெறும் அலுவலர்களை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும் 120 ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தஞ்சாவூர் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் இன்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இக் காத்திருப்பு போராட்டத்தில் இரண்டு பெண்கள் உள்பட 20 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், தஞ்சை கிராமப்பகுதிகளில் பணியாற்றிவரும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 400 பேரில், 120 ஆசிரியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்காமல் இருப்பதால், குடும்ப செலவுகளை நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு சென்று சம்பளம் கேட்டால், இன்னும் வரவில்லை. கோப்புகளை அனுப்பியுள்ளோம் என அலைகழிக்கின்றனர். சிலர் அலுவலகத்தில் உள்ளவர்கள் கேட்பதை கொடுத்து விட்டு, சம்பளத்தை பெற்று கொள்கிறார்கள். இது குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லாமல் உள்ளது. புகார் அளிப்பவர்களை வேண்டும் என பல்வேறு பணிகளை வழங்கி கஷ்டப்படுத்துகின்றனர்.


சம்பளம் வழங்காததால் தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

அதேபோல, உயர் படிப்பு முடித்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களுக்குரிய தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான ஊக்கத் தொகை கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அதற்கான கோப்புகளை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கையூட்டு எதிர்பார்த்து இதுவரை அரசுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனை கண்டித்தும், சம்பளம் வழங்க கோரியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம், இது போன்று கையூட்டு பெறும் அலுவலர்களை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்குள் மாலை 5.15 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பளம் வழங்காததால் தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் என்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு இதுவரை சம்பளம் வழங்கப்படாத ஆசிரியர்களுக்கு பிரச்சினை சரி செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில்  சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, உயர் படிப்பு முடித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு விரைவில் தனி முகாம் நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மாலை 8 மணியளவில் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget