மேலும் அறிய

3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தர் மற்றும் நீக்கப்பட்ட பதிவாளருக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பதிவாளரின் அறை பூட்டு போலீசார் பாதுகாப்புடன் உடைக்கப்பட்டு புதிய பதிவாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த சனிக்கிழமை அன்று உச்சத்தை எட்டியது. இருவரும், ஒருவரை ஒருவர் பணி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பொறுப்பு துணைவேந்தர் வெளியிட்ட உத்தரவில் பதிவாளர் (பொ) தியாகராஜனை அப்பதவியில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக பேராசிரியர் வெற்றிச்செல்வன் என்பவரை நியமனம் செய்து அறிவித்து இருந்தார். மேலும் புதிய பதிவாளர் (பொ) இன்று திங்கட்கிழமை பதவி ஏற்பார் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதனால் இன்று காலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய பதிவாளரை பதவி ஏற்கவிடாமல் பதிவாளரின் அறையை, நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டியதாக கூறப்படுகிறது. 


3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

இந்நிலையில் அந்த அறையின் வெளிக்கதவை பொறுப்பு துணைவேந்தர் சங்கர் பூட்டி விட்டாராம். இருவரும் அறைகளை பூட்டியதால் புதிய பதிவாளர் பதவி ஏற்பதில் பெரும் சர்ச்சை ஆனது. இதனையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கரும், புதிதாக நியமனம் செய்யப்பட்டட பதிவாளர் வெற்றிச்செல்வனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பு சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. 

காலையில் ஆரம்பித்த இந்த பிரச்சினை 3 நேரம் தொடர்ந்த நிலையில் பதிவாளரின் வெளி அறை  திறக்கப்பட்டு, உள் அறையின் கதவுகளை பூட்டுக்களை ஊழியர்கள் உடைத்தனர்.  அப்போது நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் தலைமைச் செயலர் உத்தரவு இருக்கும்போது ஏன் கதவை உடைக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாய்மொழி உத்தரவு எல்லாம் செல்லாது, துணைவேந்தர் உத்தரவு உள்ளது என போலீசார் அவர்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். கதவு உடைக்கப்பட்ட பின்னர், புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் உள்ளே சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக அவர் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

இதனால் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 3 மணி நேரம் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தலைமை செயலர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு நீங்கள் பதிவாளராக தொடர்ந்து செயல்படுங்கள். மாத இறுதி என்பதால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியங்களான பணிகளை தொடருங்கள் என்றார். 

எனவே பதிவாளர் அறைக்கு செல்லாமல், பக்கத்து அறையில் இருந்து அதற்கான பணிகளை தொடர்வேன். நான் பதிவாளராக தொடர்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் 8 தேதி நீதிபதி ஜெயச்சந்திரன்  விசாரணைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். 

இந்த முறைகேடு விசாரணையில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அவரை பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டேன். மேலும் சட்டப்பூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதில் எந்த விதிமீறல்களும் இல்லை.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகாரம் புதிய பதிவாளர் வெற்றி செல்வனுக்கு உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேட்டில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்த பிறகே பதிவாளரின் அறை உடைக்கப்பட்டது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு பின்னரும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget