மேலும் அறிய

3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தர் மற்றும் நீக்கப்பட்ட பதிவாளருக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பதிவாளரின் அறை பூட்டு போலீசார் பாதுகாப்புடன் உடைக்கப்பட்டு புதிய பதிவாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த சனிக்கிழமை அன்று உச்சத்தை எட்டியது. இருவரும், ஒருவரை ஒருவர் பணி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பொறுப்பு துணைவேந்தர் வெளியிட்ட உத்தரவில் பதிவாளர் (பொ) தியாகராஜனை அப்பதவியில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக பேராசிரியர் வெற்றிச்செல்வன் என்பவரை நியமனம் செய்து அறிவித்து இருந்தார். மேலும் புதிய பதிவாளர் (பொ) இன்று திங்கட்கிழமை பதவி ஏற்பார் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதனால் இன்று காலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய பதிவாளரை பதவி ஏற்கவிடாமல் பதிவாளரின் அறையை, நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டியதாக கூறப்படுகிறது. 


3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

இந்நிலையில் அந்த அறையின் வெளிக்கதவை பொறுப்பு துணைவேந்தர் சங்கர் பூட்டி விட்டாராம். இருவரும் அறைகளை பூட்டியதால் புதிய பதிவாளர் பதவி ஏற்பதில் பெரும் சர்ச்சை ஆனது. இதனையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கரும், புதிதாக நியமனம் செய்யப்பட்டட பதிவாளர் வெற்றிச்செல்வனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பு சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. 

காலையில் ஆரம்பித்த இந்த பிரச்சினை 3 நேரம் தொடர்ந்த நிலையில் பதிவாளரின் வெளி அறை  திறக்கப்பட்டு, உள் அறையின் கதவுகளை பூட்டுக்களை ஊழியர்கள் உடைத்தனர்.  அப்போது நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் தலைமைச் செயலர் உத்தரவு இருக்கும்போது ஏன் கதவை உடைக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாய்மொழி உத்தரவு எல்லாம் செல்லாது, துணைவேந்தர் உத்தரவு உள்ளது என போலீசார் அவர்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். கதவு உடைக்கப்பட்ட பின்னர், புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் உள்ளே சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக அவர் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

இதனால் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 3 மணி நேரம் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தலைமை செயலர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு நீங்கள் பதிவாளராக தொடர்ந்து செயல்படுங்கள். மாத இறுதி என்பதால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியங்களான பணிகளை தொடருங்கள் என்றார். 

எனவே பதிவாளர் அறைக்கு செல்லாமல், பக்கத்து அறையில் இருந்து அதற்கான பணிகளை தொடர்வேன். நான் பதிவாளராக தொடர்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் 8 தேதி நீதிபதி ஜெயச்சந்திரன்  விசாரணைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். 

இந்த முறைகேடு விசாரணையில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அவரை பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டேன். மேலும் சட்டப்பூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதில் எந்த விதிமீறல்களும் இல்லை.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகாரம் புதிய பதிவாளர் வெற்றி செல்வனுக்கு உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேட்டில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்த பிறகே பதிவாளரின் அறை உடைக்கப்பட்டது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு பின்னரும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
Embed widget