மேலும் அறிய

3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தர் மற்றும் நீக்கப்பட்ட பதிவாளருக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பதிவாளரின் அறை பூட்டு போலீசார் பாதுகாப்புடன் உடைக்கப்பட்டு புதிய பதிவாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த சனிக்கிழமை அன்று உச்சத்தை எட்டியது. இருவரும், ஒருவரை ஒருவர் பணி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பொறுப்பு துணைவேந்தர் வெளியிட்ட உத்தரவில் பதிவாளர் (பொ) தியாகராஜனை அப்பதவியில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக பேராசிரியர் வெற்றிச்செல்வன் என்பவரை நியமனம் செய்து அறிவித்து இருந்தார். மேலும் புதிய பதிவாளர் (பொ) இன்று திங்கட்கிழமை பதவி ஏற்பார் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதனால் இன்று காலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய பதிவாளரை பதவி ஏற்கவிடாமல் பதிவாளரின் அறையை, நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டியதாக கூறப்படுகிறது. 


3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

இந்நிலையில் அந்த அறையின் வெளிக்கதவை பொறுப்பு துணைவேந்தர் சங்கர் பூட்டி விட்டாராம். இருவரும் அறைகளை பூட்டியதால் புதிய பதிவாளர் பதவி ஏற்பதில் பெரும் சர்ச்சை ஆனது. இதனையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கரும், புதிதாக நியமனம் செய்யப்பட்டட பதிவாளர் வெற்றிச்செல்வனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பு சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. 

காலையில் ஆரம்பித்த இந்த பிரச்சினை 3 நேரம் தொடர்ந்த நிலையில் பதிவாளரின் வெளி அறை  திறக்கப்பட்டு, உள் அறையின் கதவுகளை பூட்டுக்களை ஊழியர்கள் உடைத்தனர்.  அப்போது நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் தலைமைச் செயலர் உத்தரவு இருக்கும்போது ஏன் கதவை உடைக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாய்மொழி உத்தரவு எல்லாம் செல்லாது, துணைவேந்தர் உத்தரவு உள்ளது என போலீசார் அவர்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். கதவு உடைக்கப்பட்ட பின்னர், புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் உள்ளே சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக அவர் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

இதனால் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 3 மணி நேரம் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தலைமை செயலர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு நீங்கள் பதிவாளராக தொடர்ந்து செயல்படுங்கள். மாத இறுதி என்பதால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியங்களான பணிகளை தொடருங்கள் என்றார். 

எனவே பதிவாளர் அறைக்கு செல்லாமல், பக்கத்து அறையில் இருந்து அதற்கான பணிகளை தொடர்வேன். நான் பதிவாளராக தொடர்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் 8 தேதி நீதிபதி ஜெயச்சந்திரன்  விசாரணைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். 

இந்த முறைகேடு விசாரணையில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அவரை பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டேன். மேலும் சட்டப்பூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதில் எந்த விதிமீறல்களும் இல்லை.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகாரம் புதிய பதிவாளர் வெற்றி செல்வனுக்கு உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேட்டில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்த பிறகே பதிவாளரின் அறை உடைக்கப்பட்டது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு பின்னரும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு
போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்
போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்
சிசிடிவி காட்சிகளால் அம்பலமான கொள்ளை: அரியலூரில் 27 ஆடுகள், 2 கார்கள் பறிமுதல்
சிசிடிவி காட்சிகளால் அம்பலமான கொள்ளை: அரியலூரில் 27 ஆடுகள், 2 கார்கள் பறிமுதல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget