மேலும் அறிய

இரண்டாம் முறையும் நஷ்டமா? கொட்டும் மழையில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கொட்டும் மழையில் மூழ்கிய விளைநிலத்தில் விவசாயிகள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கொட்டும் மழையில் மூழ்கிய விளைநிலத்தில் விவசாயிகள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே நரசிங்கமங்கலம் பகுதியில் நாற்று  நடவு செய்து 40 நாட்களே ஆன இளம் பயிர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து மழை நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கொட்டும் மழையில் மூழ்கிய விளைநிலத்தில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  கடந்த முறை பெய்த மழையால் நாற்று நடவு செய்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டது. அதனை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் இரண்டாவது முறையாக நடவு செய்தோம். இந்த பயிர்களும் நீரில் மூழ்கி விட்டது. கடந்த முறை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரே பருவத்தில் இரண்டு முறை சுமார் 60 ஆயிரம் வரை செலவு செய்த செய்துள்ளோம்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தஞ்சை அருகே கணபதி அக்ரஹாரம் கும்பகோணம் சாலையில் கனமழையால் பழமையான மாமரம் சாய்ந்து விழுந்தது. தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அருகே கணபதி அக்ரகாரம் பகுதியில்  கனமழையால் பழமை வாய்த்த மாமரம்  ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

அந்த நேரத்தில் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மின் கம்பங்கள் மீது மாமரம் விழுந்தால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விழுந்த மாமரம் வெட்டி அகற்றி மின் வினியோகத்தை சீராக்கும் பணி நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget