Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 16.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது – ஆமாங்க மின்தடை அறிவிப்பு வெளியாகி இருக்கு
Thanjavur power cut (16-06-2026): தஞ்சையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thanjavur power cut (16-06-2026): தஞ்சாவூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சையில், நாளை 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
இதுகுறித்து தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை கோர்ட் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜி நகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதிகளிலும், திலகர் திடல் மின்வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம் பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சை ரயிலடி மற்றும் சுற்றுப்பகுதிகள்
வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளை கேட், மகர் நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் பகுதிகளிலும், சுற்றுலா மாளிகை மின்வழித்தடத்தில் ஜி.ஏ. கேனல் ரோடு, திவானர் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மார்க்கெட் மின்வழித்தடத்தில் பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான் நகர், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு பகுதிகளிலும், கீழவாசல் மின்வழித்தடத்தில் பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம், டபீர் குளம் ரோடு பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. வ.உ.சி. நகர் மின்வழித்தடத்தில் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.
மின்தடை புகாருக்கு என்ன செய்யணும்
மேலும், பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும். எனவே நாளை காலை மின்தடையை மறந்திடாம சீக்கரமே உங்கள் தேவைகளை முடிச்சுக்கோங்க.
ட்ரெண்டிங் செய்திகள்






















