மேலும் அறிய

தஞ்சை: "தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி" - பிரம்மாண்டமாக நடைபெற்ற மாபெரும் பேரணி

அக்டோபர் 1 அன்று சிறப்பாக வீட்டுத் தோட்டம் அமைத்தவர்கள் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று அன்றாடம் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து தருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் வரும் அக்.2ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஊக்குவிப்பது

கிராம பகுதிகளில் தூய்மை சுகாதாரம் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த ஊக்குவிப்பது, சமூக ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுகாதாரம் குறித்து கல்வி மற்றும் விழிப்புணாதர்வுகள் செய்து அப்பகுதிகளில் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்துதல் போன்றப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்தும் பயனுள்ள தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் கிராமப்புறங்களில் தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மைப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி

அதன்படி தஞ்சை மாநகராட்சி சார்பில் ரயிலடியில் "தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மேயர் சண்.இராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

இப்பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து அண்ணா நூற்றாண்டு அரங்கம் வரை நடைபெற்றது. தூய்மையே சேவை முகாமில் வரும் 19ம் தேதி பெரிய கோயில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாபெரும் கூட்டுத் தூய்மை பணி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்களும் தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 

23ம் தேதி குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் "தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி" என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. 24ம் தேதி தஞ்சாவூரில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் "தூய்மையே சேவை" என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பொது இடங்களில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. செப்டம்பர் 28, 29 மற்றும் 30 தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கூட்டுத் தூய்மை பணி நடைபெற உள்ளது.

சிறப்பாக வீட்டு தோட்டம் அமைத்தவர்களுக்கு பரிசுகள்

அக்டோபர் 1 அன்று சிறப்பாக வீட்டுத் தோட்டம் அமைத்தவர்கள் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று அன்றாடம் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து தருபவர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பேரணிக்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையில் தூய்மை பாரத இயக்கத்தினர் செய்திருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget