மேலும் அறிய

தஞ்சையில் சோகம்... மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் மீதும்  விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் பரிதாபமாக பலியானார்

பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வழிந்தது

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் பாதாள சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படாதததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 10 நாள்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பழைய குழாய் அகற்றி புதிய குழாய் அமைக்கும் பணி

இந்நிலையில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிப்பதற்காக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் நேற்று மாலை தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் பகுதி தேவபூமி நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஜெயநாராயணமூர்த்தி (27), புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வளம்பப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தேவேந்திரன் (32)  ஆகிய இருவரும் புதிய குழாய் பதிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சிக்கினர்

அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் மீதும்  விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 தொழிலாளர்களும் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டது குறித்து உடன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மற்ற தொழிலாளர்களுடன் இணைந்து இடுப்பளவு மண்ணில் சிக்கியிருந்த தேவேந்திரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி

மண்ணுக்குள் சிக்கியுள்ள ஜெயநாராயணமூர்த்தியை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக 3 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டது. தகவலறிந்த மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஏடிஎஸ்பி., முத்தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர். தொடர்ந்து மண்ணில் புதைந்த ஜெயநாராயண மூர்த்தியையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

அங்கு ஜெயநாராயண மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் முதலிடம்.. - ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன !
தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் முதலிடம்.. - ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன !
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
Embed widget