மேலும் அறிய

ஆடுகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்க தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் துலுக்கவிடுதி வடக்கில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போய் கொண்டு இருக்கிறது. இதனால் ஆடு வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் துலுக்கவிடுதி வடக்கில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போய் கொண்டு இருக்கிறது. இதனால் ஆடு வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே திருடர்களை பிடிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் துலுக்கவிடுதி வடக்கு பகுதியிலும் மற்றும் பேராவூரணி வட்டம் பட்டுகோட்டை பகுதிகளிலும் ஏழை, எளிய மக்கள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் அதிகமாக வளர்த்து வருகிறார்கள். தோட்ட பயிர்கள் குறிப்பாக தென்னை  சாகுபடி அதிக அளவிலும்  பிற மரங்கள் வளர்ப்பது இப்பகுதியில் அதிகம். மேலும் பட்டுகோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு வட்டங்களில் பாசன குளங்கள் ஏரிகள் மூலம் பயிர் செய்து வருகிறார்கள்.

இப்பகுதியில் புஞ்சை நிலங்கள் அதிகமான பகுதியாகும். இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய நிலமற்ற கூலி தொழிலாளிகள் குறிப்பாக ஏழை, எளிய நலிவடைந்த  மக்கள் விவசாய தொழில் கூட மாடு வளர்ப்பது, கோழிகள் வளர்ப்பது, ஆடுகள் வளர்ப்பது அதிகம். இது இவர்களின்  பாரம்பரிய தொழிலாகும். இவர்கள் ஆடு, மாடுகள் வளர்ப்புக்கு வேண்டி தோப்பு மற்றும் கொல்லை ஆகியவற்றில் வீடு கட்டிக் கொண்டு குடியிருப்பது  வழக்கம். 

இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வுக்கும் அன்றாட குடும்ப அடிப்படை செலவுக்கு குழந்தைகள் எதிர்கால கல்வி செலவுக்கும், திருமணம் செலவு என அனைத்து செலவுகளை செய்ய இப்பகுதி மக்களுக்கு ஆடுகள் வளர்ப்பது மிக பெரிய முக்கியத்துவ தொழிலாகும். ஆனால் பேராவூரணி வட்டம் ஆவணம் பகுதியில் தற்போது ஏழை, எளிய மக்களின் வாழ்வுக்கும் அன்றாட செலவுக்கு பெரும் பயனாக உள்ள ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று கறிக்கடைகளுக்கு விற்றுவிடுவது பெரும் பிரச்சினையையாக உள்ளது.

கடந்த மாதங்களில் மட்டும் நூறு மேற்பட்ட ஆடுகள் திருட்டு போயிருக்கிறது. இது இப்பகுதியில் தொடர் பிரச்சினையாக உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ஆடுகள் கிடைக்காமல் மிகவும் மனமுடைந்து கடன் சுமையால் ஆடு வளர்ப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கடந்த வாரத்தில் துலுக்கவிடுதி வடக்கு பகுதியில் ஒரே வீட்டில் இருந்து பத்து ஆடுகளை திருடர்கள் திருடி சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் திருச்சிற்றம்பலம் செருவா விடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.,  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை அஸ்திவாரமாக விளங்கும் ஆடுகள் திருட்டு போவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கையில், கடன் வாங்கி ஆடுகள் வளர்த்து குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆடுகளை திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் கடன் சுமை அதிகரித்து அவதியடைந்து வருகிறோம். எனவே ஆடு திருடர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget