மேலும் அறிய

வெளிச்சத்தை தரும் அகல் விளக்கு; தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையோ இருளில்..!

தயாரிப்பது என்னவோ பிரகாசமான வெளிச்சத்தை தரும் அகல் விளக்குகள்தான். ஆனால் இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையோ இருள் சூழ்ந்துதான் உள்ளது.

கார்த்திகை வந்தாலே அகல்விளக்கு விற்பனை அற்புதமாக தொடங்கி விடும். ஆனால் தற்போதைய நவீன மயமாகியுள்ள இக்காலத்தில் மக்கள் களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை புறந்தள்ளி சீன களிமண் எனப்படும் பீங்கான், மெழுகால் ஆன விளக்குகளை அலங்காரமாக வாங்குகின்றனர். இதனால் அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் நலிவடைந்து வருகின்றனர்.

கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வகையில் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை மாதத்தில் வரும் மற்ற கார்த்திகை நாட்களை விட விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் லைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்கள், வீட்டின் முற்றத்திலும் அகல் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கார்த்திகை தீபத் திருநாள் கொடுக்கும். இந்த தீபத்தை களிமண்ணால் செய்த அகல் விளக்குகளில் ஏற்றி வழிபாடு நடத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்தாண்டு கார்த்திகை பண்டிகை வரும் 6ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் சுமார் பத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் மண் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு முகம், ஐந்து முகம், ஏழு முகம் கொண்ட அகல் விளக்குகள் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கின்றனர். கார்த்திகை தீபத் திருநாளுக்காக அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். காரணம் ஏரி, குளங்களில் களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம்  தெரிவிக்கிறது. ஆனால் களிமண்ணை எடுக்க அனுமதிப்பதில்லை, இதனால் தனியார் நிலங்களில் ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. மண்ணை பாதுகாத்து வைத்திருக்க இடவசதியும் இல்லை. மழை பெய்தால் அனைத்து மண்ணும் கரைந்து விடும்.

ஒரு அகல் விளக்கு உற்பத்தி செய்ய 70 காசுகள் வரை செலவாகிறது.  வியாபாரிகள் ஒரு அகல் விளக்கிற்கு 80 காசுகள் மட்டுமே கொடுக்கின்றனர். அவர்கள் சந்தையில் மூன்று விளக்குகள் 10 ரூபாய்க்கு என விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். ஆனால் விளக்கை தயாரிக்கும் நாங்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கிறோம்.

நவீனம் என்ற பெயரில் பீங்கான், மெழுகுவர்த்தி அகல் விளக்குகள் விற்பனையும் நடக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி பாரம்பரியமாக செய்து வரும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை வந்துள்ளது. இப்போது பத்து குடும்பத்தினர் மட்டுமே இந்த அகல்விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

பிரகாசமான ஒளியை தரும் அகல்விளக்கின் பின்னணியில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்துதான் காணப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Premalatha : ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget