மேலும் அறிய

வெளிச்சத்தை தரும் அகல் விளக்கு; தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையோ இருளில்..!

தயாரிப்பது என்னவோ பிரகாசமான வெளிச்சத்தை தரும் அகல் விளக்குகள்தான். ஆனால் இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையோ இருள் சூழ்ந்துதான் உள்ளது.

கார்த்திகை வந்தாலே அகல்விளக்கு விற்பனை அற்புதமாக தொடங்கி விடும். ஆனால் தற்போதைய நவீன மயமாகியுள்ள இக்காலத்தில் மக்கள் களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை புறந்தள்ளி சீன களிமண் எனப்படும் பீங்கான், மெழுகால் ஆன விளக்குகளை அலங்காரமாக வாங்குகின்றனர். இதனால் அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் நலிவடைந்து வருகின்றனர்.

கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வகையில் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை மாதத்தில் வரும் மற்ற கார்த்திகை நாட்களை விட விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் லைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்கள், வீட்டின் முற்றத்திலும் அகல் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கார்த்திகை தீபத் திருநாள் கொடுக்கும். இந்த தீபத்தை களிமண்ணால் செய்த அகல் விளக்குகளில் ஏற்றி வழிபாடு நடத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்தாண்டு கார்த்திகை பண்டிகை வரும் 6ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் சுமார் பத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் மண் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு முகம், ஐந்து முகம், ஏழு முகம் கொண்ட அகல் விளக்குகள் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கின்றனர். கார்த்திகை தீபத் திருநாளுக்காக அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். காரணம் ஏரி, குளங்களில் களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம்  தெரிவிக்கிறது. ஆனால் களிமண்ணை எடுக்க அனுமதிப்பதில்லை, இதனால் தனியார் நிலங்களில் ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. மண்ணை பாதுகாத்து வைத்திருக்க இடவசதியும் இல்லை. மழை பெய்தால் அனைத்து மண்ணும் கரைந்து விடும்.

ஒரு அகல் விளக்கு உற்பத்தி செய்ய 70 காசுகள் வரை செலவாகிறது.  வியாபாரிகள் ஒரு அகல் விளக்கிற்கு 80 காசுகள் மட்டுமே கொடுக்கின்றனர். அவர்கள் சந்தையில் மூன்று விளக்குகள் 10 ரூபாய்க்கு என விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். ஆனால் விளக்கை தயாரிக்கும் நாங்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கிறோம்.

நவீனம் என்ற பெயரில் பீங்கான், மெழுகுவர்த்தி அகல் விளக்குகள் விற்பனையும் நடக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி பாரம்பரியமாக செய்து வரும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை வந்துள்ளது. இப்போது பத்து குடும்பத்தினர் மட்டுமே இந்த அகல்விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

பிரகாசமான ஒளியை தரும் அகல்விளக்கின் பின்னணியில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்துதான் காணப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget