மேலும் அறிய

Thanjavur: ஜமாத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டையோடு - திருவையாறு அருகே பரபரப்பு

திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டையோடு: போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு வந்த கூரியரில், மண்டை ஓடு இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம் (64). இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் ஜமாத் தலைவராக உள்ளார்.

இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு, ஃப்ரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கூரியர் மூலம் ஒரு பெட்டியில் பார்சல் வந்துள்ளது. ஆனால் அதில் அனுப்பியவர் முகவரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பார்சலை வாங்க முகமது காசிம் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் கூரியர் கொண்டு வந்தவர் உங்கள் முகவரி தெளிவாக உள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்கள்தான் அனுப்பியிருப்பார்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வாங்குவதா? வேண்டாமா என்று யோசனையில் இருந்த முகமது காசிம் சந்தேகத்துடனேயே அந்த பார்சலை வாங்கி உள்ளார். இருப்பினும் முகமது காசிம் பார்சலை பிரிக்காமல் வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முகமது காசிம் மகன் முகமது மஹாதிர் அந்த பார்ச்சலை பார்த்துள்ளார். ஏன் வந்த பார்சலை பிரிக்கவில்லை என்று கேட்டபோது அனுப்பியவர் முகவரி இல்லை.


Thanjavur: ஜமாத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டையோடு - திருவையாறு அருகே பரபரப்பு

அதனால்தான் பார்சலை பிரிக்காமல் வைத்துள்ளேன் என்று முகமது காசிம் தன் மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  பார்சலை முகமது மஹாதிர் பிரித்து பார்த்துள்ளார். அதில், மண்டை ஓடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் ரத்தம் போன்று திரவமும் காணப்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசியுள்ளது.

உடன் இதுகுறித்து முகமது மஹாதிர் தனது தந்தை முகமது காசிமிடம் தெரிவித்தார். பின்னர், முகமது காசிம் திருவையாறு போலீசில் இதுபோன்று ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் மண்டையோடு உள்ளது என்று தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டி.எஸ்.பி., ராஜ்மோகன், பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் கூரியரில், அனுப்புநர் பெயர் நவ்மன்பாய் கான் என இருந்தது. அதில் ஒரு மொபைல் எண்ணும் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த மொபைல் எண்ணில் தொடர்புக்கொண்ட போது அது வடமாநிலத்தை சேர்ந்த நபருடடையது என்று தெரியவந்துள்ளது.

அந்த மண்டையோடு  ஏதாவது சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது வேறு வகையில் வந்ததா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ஜமாத் தலைவரை மிரட்டுவதற்காக இதுபோன்று யாராவது செய்துள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதும் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget