மேலும் அறிய

Thanjavur: வல்லம் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 384 வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 384 வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு வளாகங்களில் புல், புதர்கள் மண்டிக்கிடப்பதை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தஞ்சை அருகே வல்லத்தில் மருத்துவக் கல்லூரி சாலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 384 வீடுகள் கொண்ட அடுக்குமாடு குடியிருப்புகள் கடந்த 2020ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட போது கொரோனா பரவலால் லாக்டவுன் செய்யப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக இந்த குடியிருப்புகள் அறிவிக்கப்பட்டது. 

லாக்டவுன் காலத்தில் கொரோனா நோயாளிகள் இந்த குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் லாக்டவுன் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் நகரங்களில் வீடு இல்லாதவர்கள், ஏழை, எளியோர், மாற்றுத்திறனாளிகள், அரசு இடங்களில் குடி இருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரிடம் இருந்து வீடு ஒதுக்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன .

வீடு தேர்வு பெற்ற பயனாளிகள் 10 சதவீத பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்துக்கு குடிசை மாற்று வாரியம் என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்தொகையை முழுமையாக கட்ட வேண்டும். தவணை முறையில் கட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பித்த பயனாளி பணம் செலுத்த காலதாமதமானால், அடுத்த தகுதியான நபரிடம் பங்களிப்பை பெற்று வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் வீடுகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த குடியிருப்பு வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் புல், புதர்கள், செடி கொடிகள் படர்ந்துள்ளன. எனவே பயனாளிகளை விரைந்து தேர்வு செய்து வீடுகளை ஒதுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வல்லத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 384 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் கோவிட் மையமாக செயல்பட்டது. அதனால் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் கோவிட் மையத்திலிருந்து விலக்கு பெற்ற பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகாம் அமைத்து பயனாளிகளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வர வேண்டிய பயனாளிகள் பட்டியல் நிலுவையில் உள்ளது. இதனால் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பயனாளிகள் பட்டியல் வந்ததும் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்புதல் பெற்று பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் நானூறு சதுர அடி கொண்ட வீடுகள் ஒதுக்கப்படும்,  அதன் பின்னர் அங்குள்ள வேலிக்கருவைகள் உள்ளிட்டவைகளை அகற்றி சுத்தம் செய்து தரப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் குடியிருப்பு வீடுகளிலும் இந்த செடி கொடிகள் படர்ந்து விடும் நிலை உள்ளது. எனவே பயனாளிகள் தேர்வை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA, T20 World Cup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE:  மேற்கு வங்கம்: வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்
Breaking News LIVE: மேற்கு வங்கம்: வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்
IND vs SA: இதுவரை 12 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் களம்.. 4 முறையே வெற்றி.. இந்திய அணியின் மோசமான சாதனை!
இதுவரை 12 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் களம்.. 4 முறையே வெற்றி.. இந்திய அணியின் மோசமான சாதனை!
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA, T20 World Cup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE:  மேற்கு வங்கம்: வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்
Breaking News LIVE: மேற்கு வங்கம்: வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்
IND vs SA: இதுவரை 12 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் களம்.. 4 முறையே வெற்றி.. இந்திய அணியின் மோசமான சாதனை!
இதுவரை 12 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் களம்.. 4 முறையே வெற்றி.. இந்திய அணியின் மோசமான சாதனை!
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
IND-W vs SA-W: ஒரு இன்னிங்ஸில் 600 ரன்கள்.. மகளிர் டெஸ்டில் மகத்தான சாதனை படைத்த இந்திய அணி..!
ஒரு இன்னிங்ஸில் 600 ரன்கள்.. மகளிர் டெஸ்டில் மகத்தான சாதனை படைத்த இந்திய அணி..!
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Embed widget